அன்பின் சட்டத்தைப் பின்பற்றுங்கள்

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலாத்தியர் 5:13)

சில சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில், நாம் அதைச் செய்கிறோம் என்று தெரியாமல் மக்களை காயப்படுத்துகிறோம். நான் மிகவும் நேர்மையான நபர், அது ஒரு நல்ல குணம். ஆனால் நான் உரையாடலில் மற்றவர்களை அணுகும்போது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உணரவும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு நேரத்தில் நாம் சொல்வது மற்றொரு நேரத்தில் முற்றிலும் பொருத்தமற்றதாக இருக்கலாம். நாம் உண்மையில் கிறிஸ்துவால் விடுவிக்கப்பட்டுள்ளோம். நாமாக இருப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளோம். ஆனால் அன்பின் சட்டம், நமது சுதந்திரத்தை, நாம் சுயநலமாக இருப்பதற்கு ஒரு சாக்குப் போக்காகப் பயன்படுத்தக்கூடாது என்று கோருகிறது.

ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பதால், நாம் இருக்கும் சூழ்நிலைக்கு அது சிறந்த விஷயம் என்று அர்த்தமல்ல. நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்ட ஒருவருடன் நீங்கள் பேசிக் கொண்டிருந்தால், எப்போதும் எவ்வளவு நன்றாக நீங்கள் உணர்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்வதற்கு அது சிறந்த நேரமாக இருக்காது அல்லது வேலையை இழந்த ஒருவருடன் நீங்கள் பேசிக்கொண்டிருந்தால், நீங்கள் பெற்ற ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பற்றி அவர்களிடம் கூற அது சிறந்த நேரமாக இருக்காது. நாம் சுதந்திரத்தை அனுபவிக்கவே இயேசு மரித்தார், ஆனாலும் நாம் அன்பின் மூலம் ஒருவரையொருவர் சேவிக்க வேண்டும் என்பதையும் அவர் தம் வார்த்தையில் தெளிவுபடுத்துகிறார்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் மற்றவர்களை மகிழ்வித்தால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon