உங்களுடைய சந்தேகங்களை சிறை பிடியுங்கள்

உங்களுடைய சந்தேகங்களை சிறை பிடியுங்கள்

“அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” – 2 கொரி 10:5

நாம் நம் மனதைப் புதுப்பிக்க தொடங்கும்போது, ​​குழப்பமடையும் நேரங்கள் இருக்கும். நாம் பரிபூரணராக இல்லை என்று கடவுளுக்குத் தெரியும். நாம் மீண்டும் சரியான பாதையில் செல்வதற்கு எப்போதும் உதவ தயாராய் இருக்கிறார்.

துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் பரிபூரணராக இல்லை என்று பிசாசும் அறிந்திருக்கிறான். மேலும் ஒவ்வொரு அடியையும் நமக்கு நினைவூட்டுவதற்கு அவன் தன்னால் முடிந்ததைச் செய்கிறான்.

நாம் கடவுளைச் சேவித்துக் கொண்டும், நன்மை செய்து கொண்டும், விசுவாசத்தில் செயல் பட்டுக் கொண்டிருக்கலாம். பின்னர் திடீரென்று, அதற்கு எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லாமல், நம் மனதில் சாத்தானின் தாக்குதலை அனுபவிக்கும் ஒரு நாள் அல்லது வாரம் இருக்கும். நாம் தோற்றுப் போனவர்கள் என்றும், நாம் போதிய அளவு நல்லவர்கள் இல்லை என்றும், கடவுள் நம்மை நேசிக்கவில்லை என்றும் சாத்தான் நமக்குச் சொல்வான்… பட்டியல் நீண்டு கொண்டே செல்லலாம்.

அதிர்ஷ்டவசமாக, இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை நமக்கு சொல்கிறது. இரண்டாவது கொரிந்தியர் 10:5 ஒவ்வொரு.

சிந்தனையையும் கடவுளுக்குக் கீழ்ப்படிய சிறைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆகவே, பிசாசு உங்களிடம் பொய் சொல்ல முயற்சிக்கும்போது, ​​வசனத்திற்கு சென்று உண்மையைக் கண்டறியவும்.

அத்தகைய சந்தேகங்கள் உங்கள் வழியில் வரும்போது, ​​சோர்வடைய வேண்டாம். கடவுளுடைய வார்த்தையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இது ஒவ்வொரு முறையும் கிரியை செய்கிறது!


ஜெபம்

தேவனே, சாத்தான் என்னிடம் சொல்லும் பொய்யும், சந்தேகமும் என்னை வழிவிலகி செல்ல அனுமதிக்க மாட்டேன். அதற்கு பதிலாக, உம்முடைய வார்த்தையை நான் நம்புவேன். அந்த எண்ணங்களை சிறைபிடிப்பேன்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon