உங்களைக் காணிக்கைத் தட்டிலே வையுங்கள்

உங்களைக் காணிக்கைத் தட்டிலே வையுங்கள்

“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” – ரோமர் 12:1

2 கொரிந்தியர் 8-ல், கொரிந்திய விசுவாசிகளிடம் பவுல் பேசிய போது, மக்கதோனிய சபையின் மாதிரியை அவர்களுக்குக் கொடுத்தார். அவர், 5 வது வசனத்தில், அவர்கள் கொடுத்த இந்த பரிசு நாம் எதிர்பார்த்த பங்களிப்பு அல்ல, ஆனால் முதலில் அவர்கள் தங்களை தேவனுக்கும், நமக்கும் [அவருடைய முகவர்களாக], அவருடைய சித்தத்தின் படி, தங்களுடைய தனிப்பட்ட நலன்களை  புறக்கணித்து, அவர்களால் முடிந்தவரை கொடுத்தார்கள்

இது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஏனென்றால் அவர்கள் தங்கள் பணத்தை மட்டும் கொடுக்கவில்லை – ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே கொடுத்தார்கள்.

நம்மில் எத்தனை பேர் தங்கள் பெயர்களை எழுதி அதை காணிக்கை தட்டில் போட தயாராக இருக்கிறோம். ரோமர் 12:1 கூறுகிறது, நாம் நம் அனைத்தையும் கடவுளுக்கு பலியாக கொடுக்க வேண்டும்.

அப்படியென்றால் சபைக்கு வெளியே கடவுளுக்காக வாழ வேண்டும். இதன் பொருள் பணத்தை கொடுக்க தயாராக இருப்பதோடு, தேவன் உங்கள் பாதையில் கொண்டு வரும் எவரையும் நேசிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். அப்படியென்றால், உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் அவருடைய ராஜ்யத்திற்காகப் பயன்படுத்த விருப்பமுள்ளவர்களாக இருப்பதாகும்.

எனவே அடுத்த முறை நீங்கள் தேவாலயத்தில் இருக்கும்போது, ​​காணிக்கை தட்டு வரும் போது, நீங்கள் தேவனிடம், அனைத்தையும் அவருக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லும் படி உங்களை ஊக்குவிக்கிறேன்.


ஜெபம்

தேவனே, நான் என்னிடம் உள்ள அனைத்தையும் உம்மிடம் கொடுக்க விரும்புகிறேன். நான் என்னை ஒரு ஜீவ பலியாக அர்ப்பணிக்கிறேன். நீர் எனக்கு கொடுத்திருக்கும் வாழ்க்கையை நான் எப்படி பயன்படுத்த நீர் விரும்புகிறீர் என்பதை எனக்கு காட்டும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon