உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு ஒப்பந்தத்திற்குள்ளாகுதல்

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு ஒப்பந்தத்திற்குள்ளாகுதல்

“ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.” – மத் 18:20

உடன்பாட்டில் வல்லமை இருப்பதாக வேதம் கூறுகிறது. இது திருமணத்தில் குறிப்பாக உண்மை. என் கணவர், டேவ் மற்றும் எனக்கு ஆளுமையில் பெரிய வித்தியாசம் உண்டு. ஆனாலும், கடவுள் எங்களை அதிகமாக ஒன்றிணைத்துள்ளதால், நாங்கள் ஒரே மாதிரியாக சிந்திக்கத் தொடங்கினோம், மேலும் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான காரியங்களை, யோசிக்கவும், விரும்பவும் தொடங்கினோம். எங்களிடம் இன்னும் இரண்டு வெவ்வேறு ஆளுமைகள் உள்ளன. ஆனால் தேவன் எங்களுடைய வேறுபாடுகளை ஒரு நோக்கத்துடன் ஒன்றாக்கி இருக்கிறார் என்று பார்க்கிறோம்.

உங்கள் திருமணத்திலும், உங்கள் ஜெப வாழ்க்கையிலும் உங்களுக்கு வல்லமை வேண்டுமென்றால், நீங்கள் இருவரும் ஒத்து செல்ல வேண்டும். பெரிய கேள்வி என்னவென்றால் உடன்படாத தம்பதியினர் எவ்வாறு ஒத்து செல்ல கற்றுக்கொள்ள முடியும்? சம்பந்தப்பட்டவர்கள் சுயநலமாக இருப்பதை நிறுத்தும்போது, ஒப்பந்தம் வருகிறது.

சுயநலம் என்பது முதிர்ச்சியடையாத உள் நோக்கமாகும். முக்கியமானது, மற்ற நபருக்கு என்ன தேவை என்பதைப் பற்றி அக்கறை கொள்வது. உங்களைத் தாழ்த்திக் கொள்ளத் தயாராக இருப்பது, அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களால் முடிந்ததைச் செய்வதேயாகும்.

இது நிகழும்போது, ​​நீங்கள் கர்த்தருக்கு முன்பாக ஒத்து வாழ முடியும். எங்கெல்லாம் இரண்டு அல்லது மூன்று பேர் அவருடைய நாமத்தில் கூடி வருகிறார்களோ, தேவன் அங்கே அவர்களுடன் இருக்கிறார். ஆகவே உடன்பாட்டையும், ஒற்றுமையையும் தொடர இன்று தேவனுக்கு முன் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு தீர்மாணம் எடுங்கள்.


ஜெபம்

தேவனே, எனது திருமணத்தில் உடன்பாட்டின் வல்லமையை அனுபவிக்க விரும்புகிறேன். தன்னலமின்றி வாழ எங்களுக்கு உதவும், இதனால் நாங்கள் திறம்பட முடியும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon