உண்மையான திருப்தி

உண்மையான திருப்தி

அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. (சங்கீதம் 107:9)

உங்களுக்கு மிகவும் திருப்திகரமாக இருந்த காலங்களை நீங்கள் தேவனுடன் அனுபவித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏங்கித் தவிக்கும் ஆத்துமாவை உண்மையிலேயே திருப்திப்படுத்தக்கூடியவர் அவர் ஒருவரே, எனவே உங்கள் நேரத்தை உபயோகமற்ற நாட்டங்களில் வீணாக்காதீர்கள்.

நமக்குச் சொந்தமானது எதுவாக இருந்தாலும், எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், கடவுளைத் தவிர வேறு எதுவும் நம்மை உண்மையிலேயே திருப்திப்படுத்த முடியாது. பணம், பயணம், வீடுகள் மற்றும் மர சாமானங்கள், உடைகள், சிறந்த வாய்ப்புகள், திருமணம், குழந்தைகள் மற்றும் பல ஆசீர்வாதங்கள் போன்ற அனைத்தும் நிச்சயமாக உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆனால் மகிழ்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது, அதே சமயம் உண்மையான மகிழ்ச்சி, கடவுள் நம்மோடு இருக்க வேண்டும் என்று விரும்புவது. வெளிப்புற சூழ்நிலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சுயாதீனமான ஒரு உள்ளான உறுதியை அடிப்படையாகக் கொண்டது.

நாம் எல்லாவற்றிலும் கடவுளுக்கு முதலிடம் கொடுக்காத வரையில், எப்போதும் திருப்தி அடைய மாட்டோம், நாம் அப்படி செய்யும்போது, அவர் நாம் விரும்பும் விஷயங்களைக் கொடுப்பார் (மத்தேயு 6:33 ஐப் பார்க்கவும்).

நாம் நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறோம், மேலும் ஒவ்வொரு நாளும் நம்முடைய சரீரத்திற்கு உணவளிக்க கவனமாகத் திட்டமிடுகிறோம். சில சமயங்களில் அடுத்த நாள் என்ன சாப்பிடப் போகிறோம் என்பது நமக்குத் தெரியலாம்! நாம் நமது இயற்கையான சரீரத்திற்கு உணவளிப்பது போல், ஆவிக்குறிய ரீதியிலும் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுளுடைய வார்த்தையில் நம்மை ஊன்றாமல், அவருடைய பிரசன்னத்தால் நம்மை நிரப்பாமல், அவருடன் ஒரு சிறந்த உறவை வைத்திருக்க முடியும் என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். நீங்கள் இந்த சரீரத்திற்கான உணவைத் தேடுவது போல், குறைந்தபட்சம் அதே விடாமுயற்சியுடன் அவரைத் தேடுங்கள்.

கடவுளுடன் ஒரு உயிருள்ள, உறவை அனுபவிப்பதற்காக நாம் உருவாக்கப்பட்டுள்ளோம், அதை அனுபவிக்கும் வரை நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று எப்போதும் இல்லாத்து போல் இருக்கும். அவருடைய வார்த்தையை உட்கொண்டு, ஒவ்வொரு நாளும் அவருடைய பிரசன்னத்தை அனுபவித்து மகிழ நாம் நேரத்தை எடுத்துக் கொண்டால், ஆழ்ந்த மற்றும் தொடர்ச்சியான திருப்தியை அனுபவிப்போம்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் சரீரத்திற்கு தேவையான உணவை கொடுப்பது போல் உங்கள் ஆத்துமாவிற்கும் உணவளிக்கவும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon