தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; (ரோமர் 8:29)
இன்றைய வசனத்தின்படி, நம் வாழ்வில், கடவுளின் குறிக்கோள்களில் ஒன்று, நம்மை இயேசுவைப் போல ஆக்குவதாகும். நம்முடைய எண்ணங்களிலும், வார்த்தைகளிலும், மற்றவர்களை நடத்தும் விதத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், செயல்களிலும் நாம் தொடர்ந்து இயேசுவைப் போல இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இயேசுவைப் போல் மாறுவது ஒரே இரவில் நடக்காது; இது நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு செயல்முறை.
நேற்றைய வசனம், ரோமர் 12:1-ஐ நினைவுகூருங்கள்: “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.” கடவுளுக்கு நம்மைக் கொடுப்பதற்கு நாம் வேண்டுமென்றே முடிவு எடுக்க வேண்டும் என்பதே இதன் பொருள். கடவுள், நமக்கு ஒரு சுதந்திரமான விருப்பத்தை அளித்துள்ளார். நாம் அவருக்கு முழுமையாகச் சொந்தமாக இருப்பதற்கான ஒரே வழி, நம்மை அவருக்கு இலவசமாகக் கொடுப்பதுதான். அவரை நேசிக்கவோ அல்லது அவருக்கு சேவை செய்யவோ அவர் ஒருபோதும் நம்மை வற்புறுத்த மாட்டார். அவர் நம்மிடம் பேசுவார், வழிநடத்துவார், நம்மைத் தூண்டுவார், ஆனால் சரணடையும் முடிவை, எப்போதும் அவர் நம்மிடம் விட்டுவிடுவார்.
கடவுள் மனிதனைப் படைத்தார், ரோபோக்கள் அல்ல, மேலும் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்ள அவர் நம்மை வற்புறுத்துவதில்லை, ஏனென்றால் அவர் நம்முடைய சொந்த விருப்பங்களைச் செய்வதற்கான சுதந்திரத்தை நமக்கு அளித்துள்ளார் – மேலும் நாம் ஒவ்வொரு நாளும் மனமுவந்து நம் வாழ்க்கையை அவருக்கு முன் வைத்து, அவரைத் தேர்ந்தெடுக்க அவர் விரும்புகிறார். “கடவுளே, என்னுடைய சித்தம் அல்ல, உமது சித்தம் நிறைவேறட்டும்” என்று சொல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அந்த சிறிய, எளிமையான ஜெபம், உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்தது, மேலும் அது, கடவுளுக்கு தேவைப்படும் முழு சரணாகதியை பிரதிபலிக்கிறது. கடவுள் உங்களிடம் ஏதாவது பேசிக் கொண்டிருந்தால், இனியும் சரணடைவதைத் தள்ளிப் போட வேண்டாம் என்று நான் உங்களை ஊக்குவிக்கிறேன். அவருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து இன்றே சரணடைவதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பெலனாக இருக்கும்படி அவரிடம் கேளுங்கள், அவர் மூலம் நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளிடம் சரணடைவதைத் தேர்ந்தெடுங்கள்.