ஜெபியுங்கள், பிறகு திட்டமிடுங்கள்

ஜெபியுங்கள், பிறகு திட்டமிடுங்கள்

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். (நீதிமொழிகள் 19:21)

நாம் அவருடைய சத்தத்திற்கு செவிசாய்த்து, அவருடன் ஒரு உடன்படிக்கைக்கு நம் காதுகளை ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. பல நேரங்களில் கடவுள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டுகிறார், ஆனால் அவருடைய திட்டம் நமக்குப் பிடிக்காததால் நாம் அதைச் செய்வதில்லை. அவர் சொல்வதை நாம் தெளிவாகக் கேட்கும்போது, அது நமக்குப் பிடிக்காத போது ஆவிக்குறிய செவிடாகக் கூட நடிக்கலாம். நம்முடைய மாம்ச ஆசைகளும் கடவுளுடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கலாம்.

நாம் உண்மையை நேருக்கு நேர் சந்திக்க முடியும், ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தன்னைப் பற்றியும் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றியும் பேசுவதை விட, மற்றவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்வது மிகவும் எளிதானது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நம் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான திட்டம் நம்மிடம் உள்ளது, மேலும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழியும் நம்மிடம் உள்ளது. பெரும்பாலும், கடவுள் நம் திட்டத்தைக் கேட்டு அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், ஆனால் அவருடைய திட்டத்தைக் கேட்பதற்குப் பதிலாக, நம் திட்டத்தை நிறைவேற்ற அவர் செய்ய வேண்டியதைச் செய்யும்படி அவரிடம் கேட்கிறோம். நாம் எப்போதும் முதலில் ஜெபிக்க வேண்டும், பின்னர் திட்டங்களை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்த கடவுளிடம் கேட்க வேண்டும். கடவுளின் திட்டத்தைக் கேளுங்கள்; அதைப் பின்பற்றுங்கள், நீங்கள் எப்போதும் வெற்றி பெறுவீர்கள்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் சொந்த திட்டங்களை உருவாக்கும் முன் கடவுளின் திட்டத்தைப் பெறுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon