தேவன் நம்மைத் திருத்துவதற்காக நம்மிடம் பேசுகிறார்

தேவன் நம்மைத் திருத்துவதற்காக நம்மிடம் பேசுகிறார்

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். (எபிரேயர் 12:6)

நாம் அனைவரும் சில சமயங்களில் திருத்தப்பட வேண்டும், மற்றவர்களையோ அல்லது சூழ்நிலைகளையோ பயன்படுத்தி நம்மைத் திருத்துவதற்கு முன் நம்மிடம் பேசி, நம்மைத் திருத்த வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம் என்று நான் நம்புகிறேன். திருத்தம் என்பது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாகும், குறிப்பாக மற்றவர்கள் மூலம் அது வரும்போது. தனிப்பட்ட விஷயங்களைக் கையாள்வதில், முதலில் நமக்கு உதவ தேவன் விரும்புகிறார். ஆனால், தனிப்பட்ட முறையில் நம்மை எப்படித் திருத்துவது என்று நமக்குத் தெரியாவிட்டால் அல்லது அதைப் பெறாவிட்டால், பொதுவான வழிகளில் அவர் நம்மைத் திருத்தலாம்.

ஒரு சமயம் நாங்கள் வெளி நாட்டில் ஊழியம் செய்து கொண்டிருந்தோம். நான் ஒரு உணவகத்தில், நான் என்ன சாப்பிட விரும்புகிறேன் என்பதை பணியாளரிடம் தெரிவிக்க முயற்சித்தேன், ஆனால் அவர் ஆங்கிலம் அதிகம் பேசவில்லை, அவருடைய மொழியில் நான் பேசவில்லை. விரக்தி என் அணுகுமுறையிலும், குரலிலும் தெளிவாகத் தெரிந்தது. நான் அந்த நாட்டில் ஊழியம் செய்வதற்காக சென்றிருக்கிறேன் என்பதை அறிந்தும் அங்கிருந்த மக்களுக்கு முன்னால், நான் மோசமாக நடந்துகொண்டேன், நிச்சயமாக, அவர்களுக்கு எனது முன்மாதிரி முக்கியமானது.

நான் மோசமாக நடந்துகொண்டேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் உண்மையில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்பினார். டேவும், நானும் எங்கள் ஹோட்டல் அறைக்குத் திரும்பியபோது, டேவ் அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு நான் மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கவில்லை என்று கூறினார்.

அவர் சொல்வது சரிதான் என்று எனக்குத் தெரிந்தாலும், என்னுடைய நடத்தை எவ்வளவு முக்கியமானது என்பதை நான் முழுமையாக உணர்ந்துகொள்ள கடவுள் அவரைப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறிந்திருந்தும், டேவ் முன்பு இதேபோல் நடந்துகொண்டதை அவருக்கு சுட்டிக்காட்டுவதே எனது விருப்பமாக இருந்தது. நான் அதைச் செய்திருந்தால், நான் உண்மையாகவே திருத்தம் என்ற வார்த்தையைப் பெற்றிருக்க மாட்டேன், பின்னர் கடவுள் என்னை வேறு வழியில் திருத்த வேண்டியிருக்கும்-ஒருவேளை மிகவும் சங்கடமாக அல்லது வேதனையாக அது இருந்திருக்கும்.

ஜெபித்து, கடவுளிடம் இருந்து திருத்தம் பெற உங்களுக்கு உதவுமாறு கேட்கத் தொடங்குங்கள், மேலும் அவர் எப்போது திருத்தம் அனுப்புகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளின் திருத்தத்தை எதிர்க்காதீர்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon