தேவன் பேசுகிறார், அதனால் அவர் நமக்கு உதவ முடியும்

தேவன் பேசுகிறார், அதனால் அவர் நமக்கு உதவ முடியும்

அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோம். (ஏசாயா 10:27)

உங்கள் வாழ்க்கையில் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையைப் பற்றி தேவன் உங்களிடம் பேசும்போது, அதை நீங்கள் தள்ளிப் போடக்கூடாது. பரிசுத்த ஆவியின் வல்லமையும், அபிஷேகமும் உங்கள் மீதான அதன் பிடியை உடைக்க வல்லது என்று நீங்கள் நம்பலாம். நீங்கள் அதைச் சமாளிக்க விரும்பும் வரை, பிரச்சினையை எதிர்கொள்வதைத் தள்ளிப் போட்டால், கடவுளின் வல்லமை அல்லது அபிஷேகம் இல்லாமல் மாற்ற முயற்சிப்பதை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நாம் அடிக்கடி, நம்முடைய சொந்த நேரத்தில் காரியங்களைச் செய்ய விரும்புகிறோம், அதைச் சமாளிக்க முயற்சிக்கும் போது அது கடவுளால் அபிஷேகம் செய்யப்படாததால் நாம் போராடுகிறோம். உதாரணமாக, நான் ஒரு உடன் பணியாளருடன், ஒரு பிரச்சனையை எதிர் கொள்ள வேண்டிய நேரம் இருந்தது. அதைக் குறித்து சிறிது நேரம் ஜெபித்து, அந்த நபரின் இருதயத்தை கடவுள் தயார்படுத்த அனுமதிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். நான் கடவுளின் கால அட்டவணையைப் பின்பற்றும் போது, அதைச் செய்ய எனக்கு எப்போதும் அவருடைய அபிஷேகம் இருக்கும். கடவுள் அவற்றைக் கையாள விரும்பும் போது, பிரச்சினைகளைச் சமாளிக்கவும், நான் காத்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பும் போது அவற்றை விட்டு விடவும் நான் கற்றுக்கொண்டேன். கடவுளின் உதவி மற்றும் நேரத்திற்காக காத்திருக்காமல், என்னை மாற்றிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயற்சிக்கும் ஏமாற்றமான அனுபவமும் எனக்கு உண்டு. நம் வாழ்வில் எல்லாம் சரியாக செயல்பட தேவனின் அபிஷேகம் இருக்க வேண்டும்.

நம் வாழ்வில் மாற்றம் தேவை என்று கடவுள் நமக்கு உணர்த்தும் போது, அதை எதிர்கொள்ள அவர் நம்மை தயார்படுத்தியுள்ளார் என்று அர்த்தம். நாம் தயாராக இருக்கிறோம் என்று உணராமல் இருக்கலாம், ஆனால் அவருடைய நேரம் சரியானது என்றும், அவருடைய அபிஷேகம் நமது முழு சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் நுகத்தை உடைக்க வல்லது என்றும் நம்பலாம். “ஆண்டவரே, நான் ஆயத்தமாக உணராமல் இருக்கலாம், ஆனால் நேரம் வந்துவிட்டது என்று நீர் கூறினால், உமது வல்லமை என்னுடன் இருப்பதாக நான் நம்புகிறேன், உமக்குக் கீழ்ப்படிவதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று கூற நான் கற்றுக்கொண்டேன். பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு நீங்கள் விசுவாசத்தில் இறங்கும்போது, உங்களுக்குத் தேவையான ஞானம், கிருபை, வல்லமை மற்றும் திறன் ஆகியவை இருப்பதைக் காண்பீர்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை, மற்றொரு நாள் வரை தள்ளி வைக்காதீர்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon