நதியை ஓட்டத்திலிருக்க செய்யுங்கள்

நதியை ஓட்டத்திலிருக்க செய்யுங்கள்

“வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.” – யோவாண் 7:38

கிறிஸ்துவின் விசுவாசிகளாக, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழ்கிறார். நம்முடைய ஆவியோடு நிலைத்திருக்கிறார். அவர் நமக்குள் இருக்கும் நதி. இந்த நதி நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்த அற்புதமான பரிசு. இது நல்ல ஆரோக்கியத்துடனும், வாழ்க்கையில் நேர்மறையான கண்ணோட்டத்துடனும், மன்னிக்கும் மனப்பான்மையுடனும் தாராளமாக பாய்கிறது.

எவ்வாறாயினும், பலர் தங்கள் நதியை வற்ற அனுமதித்துள்ளனர். அவர்கள் எப்போதுமே சோர்வடைந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் என்ன செய்தாலும், அவர்களுக்கு அதிலிருந்து வெளியேறத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டதாக இருப்பதும், ஒரு காலத்தில் வல்லமையாக பாய்ந்து கொண்டிருந்த நதியை ஒரு சிறிய நீரோடையாக மாற்றி விட்டிருக்கிறது. இது போன்றவர்களை உங்களுக்குத் தெரியுமா? இது உங்கள் வாழ்க்கையைப் போல இருக்கிறதா?

உங்கள் நதியை சுத்தம் செய்யாவிட்டால், எல்லாம் கடினமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கும். உங்களால் தாகம் தீர்க்கும் தண்ணீரை பருக முடியாது.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் சண்டையிடுவதையும், போராடுவதையும், சேற்றின் வழியே செல்வதையும் நிறுத்துவதற்கு இன்று தேர்வு செய்யுங்கள். குப்பைகளை அகற்ற உங்களுக்கு உதவ கடவுளிடம் கேளுங்கள். ஓட்டத்தைத் தடுப்பது எது மற்றும் அதை எவ்வாறு அகற்றுவது என்பதை அவர் உங்களுக்குக் காண்பிப்பார். பின்னர், ஜீவ நதியின் திருப்திகரமான ஓட்டத்தை அனுபவிக்கவும்!


ஜெபம்

கடவுளே, உம்முடைய ஜீவ நதி என்னில் பாய விரும்புகிறேன். அதன் வழியைத் தடுக்கும் குப்பைகள் என்னவென்று எனக்குக் காட்டும். பின்னர் அதை எவ்வாறு அகற்றுவது என்பதைக் காட்டும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon