
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (2 கொரிந்தியர் 13:14)
இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முன், அவர் தம்முடைய சீடர்களிடம் பேசி, அவர் இல்லாத வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்படுத்த முயன்றார். அவர் பிரிந்து செல்லும் போது, பிதா அவர்களுக்குள் வாழ்வதற்கு, தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை அனுப்புவார் என்று அவர்களிடம் கூறினார் – ஆலோசனை, உதவி, பலப்படுத்துதல், பரிந்து பேசுதல், வழக்கறிஞராக இருப்பது, பாவத்தைக் கண்டறிதல், நீதியை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை செய்வார். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் நெருங்கிய ஐக்கியம் கொண்டு, எல்லா உண்மையிலும் அவர்களை வழிநடத்துவார். மேலும் இயேசு கிறிஸ்துவின் வாரிசுகளாக அவர்களுக்குச் சொந்தமான அனைத்தையும், அவர்களுக்கு அனுப்புவார் (யோவான் 16:7-15; ரோமர் 8:17 ஐப் பார்க்கவும்).
நீங்கள் பார்க்கிறபடி, பரிசுத்த ஆவியானவரை நமக்கு அனுப்பியதில் கடவுளின் நோக்கம், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ளவும், அவர் நமக்கு வழங்கும் அனைத்தையும் பெற செய்வதற்கும். நம்மை ஆறுதல்படுத்தவும், அறிவுரை வழங்கவும், கற்பிக்கவும், கடவுள் வாக்குறுதியளித்த மற்ற விஷயங்களைச் செய்யவும் நாம் அவரை அனுமதிப்போம் என்றால், அவர் நமக்குச் செய்யும் ஊழியத்தின் ஒரு பகுதி, நம்மை வழிநடத்துவது. மேலும் அவருடைய சத்தத்திற்கு நாம் செவிசாய்க்க வேண்டும். நம்மிடம் பேசுவதற்கு அது உதவுகிறது.
நம் வாழ்வில் பரிசுத்த ஆவி நமக்கு தேவை, கடவுள் அவரை நமக்கு கொடுத்துள்ளார். அவருடனான நமது ஐக்கியம் நாம் விரும்பும் அளவுக்கு நெருக்கமாகவும் ஆழமாகவும் இருக்க முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடன் இருப்பதற்கு நேரம் ஒதுக்குவது, அவருடைய வார்த்தைகளுக்கு, நம் இருதயங்களைத் திறப்பது. நம்மிடம் பேசும்படி அவரிடம் கேளுங்கள்,
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளுடனான உங்கள் உறவு நீங்கள் விரும்பும் அளவுக்கு ஆழமாகவும், நெருக்கமாகவும் இருக்கலாம்.