
“நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” – யோவாண் 14:16
நம்முடைய முதல் எதிரி நம் உணர்ச்சிகள் தான். நாம் எப்படி உணர்கிறோம் என்பதன் மூலம் நாம் வழிநடத்தப்படுகிறோம். ஆனால் உணர்வுகள் நிலையற்றவை என்பதை நாம் உணர வேண்டும். நாளுக்கு நாள் மாறும். நம் மனதில் வரும் ஒவ்வொரு எண்ணத்தையும் பின்பற்றாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நம் எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்கு உண்மையை சொல்கிறதில்லை.
உதாரணமாக, பலர் தாங்கள் சத்தியத்தை எதிர்கொள்ள முடியாததால் மனச் சோர்வடைகிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உண்மையை வெளிப்படுத்தவே வந்தார். நம் பிரச்சினைகளுக்கு சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டு மற்ற அனைவரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, உண்மையை எதிர் கொண்டு, நம்முடைய செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
அப்படி நாம் செய்து, தேவன் நமக்கு உதவும்படி கேட்கும்போது, கனமான ஆவி நம்மை விட்டு வெளியேறுகிறது, மேலும் நாம் இலகுவாகவும், சுதந்திரமாகவும் உணர்வோம்.
பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் வெளிப்படுத்தும் ஞானத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்கள் உணர்ச்சிகளுக்கு எதிரான வெற்றியை நீங்கள் அனுபவிக்க முடியும்.
நம்முடைய ஆலோசகராகவும், உதவியாளராகவும், பரிந்துரையாளராகவும், வழக்கறிஞராகவும், பலப்படுத்துபவராகவும், காத்திருப்பவராகவும், இயேசு அவரை நம்மிடம் அனுப்பி இருக்கிறார்.
தேவனுக்கு நன்றி. நாம் ஏமாற்றமடையவோ, நம்பிக்கையற்றிருக்கவோ, மனச்சோர்வடையவோ அல்லது விரக்தியடையவோ தேவையில்லை. பரிசுத்த ஆவியானவர் நம் உணர்ச்சிளுக்கு மேல் வெற்றியை தருகிறார்!
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, என் உணர்ச்சிகளையும், நடத்தையையும் என்னால் கட்டுப்படுத்த முடியாது. என்னை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் உம்முடைய வல்லமையை அளித்து எனக்கு உதவியதற்கு நன்றி செலுத்துகிறேன்.