பிறருக்காக ஜெபிப்பது கடினமாக இருக்கும் போது

பிறருக்காக ஜெபிப்பது கடினமாக இருக்கும் போது

“உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.” – லூக்கா 6:28

ஒருவர் உங்களுடைய உணர்வுகளை புண்படுத்தும்போது நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? அது உங்கள் மகிழ்ச்சியை திருட அனுமதிக்கிறீர்களா? அல்லது உங்கள் உணர்ச்சிகள் தாறுமாறாக செயல்படுகிறதா?

மக்கள் நம்மை காயப்படுத்தும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று லூக்கா 6:28 சொல்கிறது: நாம் அவர்களுக்காக ஜெபித்து, அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்.

உங்களை சபிப்பவர்களின் மகிழ்ச்சிக்காக ஜெபிப்பது இயற்கையான பதில் அல்ல. ஆனால் கடவுளின் ஞானம் நம்முடையதை விட உயர்ந்தது, எனவே அது “சரியானது” என்று உணரவில்லை என்றாலும், அதைச் செய்வது சரியான காரியமாகும்.

தேவனுக்கு கீழ்ப்படிந்து அதைச் நான் செய்கிறேன்; “ஆண்டவரே, என்னைத் துன்புறுத்தியவர்களை ஆசீர்வதிப்பது போல் நான் உண்மையில் உணரவில்லை, ஆனால் எப்படியாவது அதை செய்யும்படி நான் விசுவாசத்தில் ஜெபிக்க விரும்புகிறேன். ஏனென்றால் உம்முடைய பிரசன்னத்தினால் அவர்களை ஆசீர்வதியுங்கள் என்று என்னிடம் சொல்கிறீர்”

அவர்களுக்காக ஜெபிக்கத் தேர்ந்தெடுப்பது, தேவன் நாம் செய்யும்படி கேட்கும் மிகக் கடினமான காரியங்களில் ஒன்றாகும், குறிப்பாக நம்மைத் துன்புறுத்தியவர் தவறு செய்பவர், மன்னிக்கத் தகுதியற்றவர் என்று நாம் நம்பினால்.

ஆனால் மன்னிப்பைக் கடைப்பிடிக்க தேவன் நமக்கு அறிவுறுத்துகிறார். மன்னிப்பின் பாதையை நாம் பின்பற்றும்போது, தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதன் மூலம் கிடைக்கும் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்போம். நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியும் போது, வேதனையை மேற்கொண்டு வாழ்க்கையை இன்னும் அதிகமாக அனுபவிக்க அவர் உங்களுக்கு உதவுவார்.


ஜெபம்

தேவனே, இது கடினம், ஆனால் என்னை காயப்படுத்தியவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். அவர்களை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மனக்காயத்தை விட்டு விட்டு அவர்களை மன்னிக்க எனக்கு உதவும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon