மாற்றத்திற்கான நேரம்

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (2 கொரிந்தியர் 3:18)

தேவன் நம் வாழ்வில் கொண்டுவர விரும்பும் மாற்றங்களை நாம் அனுபவிக்க, அவருடைய வார்த்தையும், ஆவியும் நம் வாழ்வில் செயல்பட வேண்டும் என்பதை இன்றைய வசனம் நமக்குக் கற்பிக்கிறது.

கிறிஸ்துவிடம் வரும் அனைவருக்கும் மாற்றம் தேவை. நாம் அவரை அறிவதற்கு முன்பு எப்படி இருந்தோமோ, அப்படியே இருக்க நாம் நிச்சயமாக விரும்பவில்லை, இல்லையா? நாம் மாற்றத்தை விரும்பலாம், விரும்ப வேண்டும். ஆனால் நம்மை நாமே மாற்ற முடியாது என்பதை நாம் உணர வேண்டும். தேவையான மாற்றங்களைப் பற்றி நம்மிடம் பேசுவதற்கும், பின்னர் அவற்றை நம் வாழ்வில் கொண்டு வருவதற்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையை நாம் முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும். விசுவாசிகளாக, அவர் நமக்குள் செய்யும் கிரியையுடன், நிச்சயமாக நாம் ஒத்துழைக்க வேண்டும், ஆனால் அவரே மாற்றத்தைச் செய்பவர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல சமயங்களில், அவர் நம் வாழ்வில் செய்ய விரும்பும் மாற்றங்களைப் பற்றி நம்மிடம் பேசுவார். எனவே நாம் அவருடைய சத்தத்திற்கு நம் இருதயத்தை உணர்திறன் அடையச் செய்ய வேண்டும். எனவே அவர் நம்மை “ஒரு மகிமையான நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு” மாற்றும் போது நாம் அவருடன் உடனடியாக வேலை செய்யலாம்.

தேவன் நம் வாழ்வில் செயல்படுகையில், அவரிடமிருந்து நாம் கேட்கும் வழிகளில் ஒன்று, நாம் அவருக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்யும் போது நம் ஆவியில் சங்கடமாக உணருவோம். எந்த நேரத்திலும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் அல்லது நம் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், நாம் செய்ய வேண்டியது அவரிடம் சரணடைவது மட்டுமே. அவர் கிரியை செய்வார். “கர்த்தாவே, உமது சித்தம் நிறைவேறட்டும், என்னுடையதல்ல” என்று சொல்லுங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர, பரிசுத்த ஆவியின் மீது சாய்ந்து கொள்ளுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon