முதலில் யோசியுங்கள்

இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்கவேண்டும். (அப்போஸ்தலர் 19:36)

கடவுளிடம் ஒன்றைக் கேட்காமல், அவர் நம்மிடம் அதைப் பற்றி பேசுவதற்காகக் காத்திருப்பது ஞானமானது அல்ல; அல்லது நாம் என்ன செய்ய போகிறோம் என்பதைப் பற்றி முதலில் சிந்திக்காமல் காரியங்களில் குதிப்பது புத்திசாலித்தனம் அல்ல. நாம் அடிக்கடி பல காரியங்களில் நம்மைக் ஈடுபடுத்திக் கொண்டு, சோர்வாக உணருகிறோம். கடவுள் நிச்சயமாகத் தம் ஆவியின் மூலம் நம்மைப் பலப்படுத்துகிறார், ஆனால் நமக்கான, அவருடைய சித்தத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்வதற்கு அவர் நம்மைப் பலப்படுத்துவதில்லை. முட்டாள்களாக இருக்க அவர் நம்மை பலப்படுத்த மாட்டார்!. நாம் ஒரு செயலைச் செய்ய உறுதியளித்தவுடன், நம் வார்த்தையைக் கடைப்பிடிக்கவும், நேர்மையானவர்களாகவும் இருக்கவும் வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். எனவே இன்றைய வசனத்தில் அவர் நமக்கு அளிக்கும் அறிவுரை என்னவென்றால், “பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்.” நம் சிந்தனையில், பரிசீலனையில் உள்ள விஷயத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கடவுளிடம் கேட்க வேண்டும்.

இது நிச்சயமாக நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். நான் உற்சாகமடைந்து என்னில் சிறந்ததைப் பெறுவதற்கு அனுமதித்தேன், மேலும் கடவுளின் ஆலோசனையைக் கேட்காமலேயே காரியங்களுக்கு ஆம் என்று கூறினேன், பின்னர் எனது அட்டவணையைப் பற்றி புகார் கூறுவேன். நான் முதலில் அவரைத் தேடி, அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றியிருந்தால், விரக்தியையும், மன அழுத்தத்தையும் நான் தவிர்த்திருக்க முடியும் என்பதை கடவுள் எனக்குத் தெரியப்படுத்தினார்.

நீங்கள் விரும்பும் முக்கியமான காரியங்களில் ஈடுபட உங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். எதையும் தீவிரமாக சிந்திக்காமல், கடவுளின் வழிகாட்டுதலை நாடாமல், நீங்கள் இவற்றைச் செய்ய வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்காமல் எதையும் செய்ய வேண்டாம் என்று நான் இன்று உங்களை ஊக்குவிக்கிறேன்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: பேசுவதற்கு முன் சிந்தியுங்கள்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon