நாம் ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும்

நாம் ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும்

அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். (யாத்திராகமம் 32:14)

ஜெபம் கடவுளுடைய மனதை மாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருவர் அவருடன் பேசுவதற்கும், அவர் சொல்வதைக் கேட்பதற்கும் நேரத்தை எடுத்துக் கொள்வதன் விளைவாக, கடவுள் உண்மையில் அவர் செய்யத் திட்டமிட்டிருந்த ஒன்றை மறுபரிசீலனை செய்ய முடியும்.

மோசே பத்துக் கட்டளைகளைப் பெறுவதற்காக சீனாய் மலையில் ஏறிச் சென்றபோது, மக்கள் விரும்பியதை விட அதிகமான நேரம் எடுத்துக் கொண்டார். தலைவன் இல்லாததால், மக்கள் தேவனை மறந்து, தங்கள் மாம்ச ஆசைகளுக்கு அடிபணிந்து, தங்களுடைய நகைகளையெல்லாம் உருக்கி, தங்கக் கன்றைச் செய்து, அதை வழிபட முடிவு செய்தனர். தேவன் மலையில் மோசேயிடம் பேசி, முக்கியமாக, “நீ அங்கே திரும்பிச் செல்வது நல்லது, ஏனென்றால் மக்கள் உண்மையில் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் நான் அதில் கோபமாக இருக்கிறேன்.” (கடவுளுக்கு நன்றி, சங்கீதம் 30:5 கூறுகிறது, அவருடைய கோபம் ஒரு கணம் மட்டுமே நீடிக்கும், ஆனால் அவருடைய கிருபை என்றென்றும் இருக்கிறது!) மோசே மக்களைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருந்ததால், அவர்களுக்காகப் பரிந்து பேசத் தொடங்கினார். கடவுள் அவரிடம் சொன்னர், “என்னை விட்டு விடு, ஏனென்றால் இந்த மக்கள் கடினமான கழுத்தை உடையவர்கள் மற்றும் பிடிவாதமானவர்கள்” (யாத்திராகமம் 32:9-10 ஐப் பார்க்கவும்) என்று. ஆனால் மோசே தனது இருதயத்தில், பிரச்சினை தீர்க்கப்படாததால் கைவிட மறுத்துவிட்டார். அவர் மக்களை நேசித்தார், அவர் கடவுளின் குணத்தை அறிந்திருந்தார். மேலும், கடவுள் உண்மையில் மக்களை நேசித்தார் என்பதையும், அவர்களைத் தவிக்க விட விரும்பவில்லை என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

மோசே, தனது மனதை மாற்றும்படி கடவுளிடம் கேட்டார் (யாத்திராகமம் 32:12 ஐப் பார்க்கவும்) இன்றைய வசனத்தின்படி, அப்படியே தேவன் செய்தார். நாம் ஜெபிக்கும்போது மாற்றத்தை ஏற்படுத்தலாம்!


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் ஜெபிக்கும்போது, கடவுள் கேட்கிறார், பதிலளிக்கிறார்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon