நியாயப்பிரமாணம் முடிந்தது

நியாயப்பிரமாணம் முடிந்தது

இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது. (யோவான் 19:30)

இயேசு சிலுவையில் இருந்து பேசிய போது, “முடிந்தது!” என்றார் நியாயப்பிரமாணம் முடிந்து விட்டது என்றார். இப்போது, யூத மத குருமார்கள் மட்டுமல்ல, எல்லா மக்களும் அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்க முடியும், அவருடன் பேசவும், அவருடைய சத்தத்தைக் கேட்கவும் முடியும் என்று அவர் அர்த்தப்படுத்தினார்.

இயேசு நமக்காக மரிப்பதற்கு முன், கடவுளின் வாக்குறுதிகளைப் பெறுவதற்கான ஒரே வழி, ஒரு பரிபூரண, பாவமற்ற வாழ்க்கையை வாழ்வது (நியாயப்பிரமாணத்தின் படி), அல்லது பாவத்திற்காக இரத்தம் படைக்கப்பட வேண்டும், விலங்குகள் பலி செலுத்தப்பட வேண்டும். இயேசு மரித்து, மனிதகுலத்தின் பாவங்களுக்கு தம்முடைய சொந்த இரத்தத்தால் அதற்கான விலைக்கிரயத்தை செலுத்தியபோது, ஒவ்வொரு நபரும் கடவுளின் பிரசன்னத்தை அனுபவிக்க ஒரு வழியைத் திறந்தார். “முடிந்தது” என்று இயேசு சொன்ன போது, பயத்தை விட சுதந்திரமான வாழ்க்கைக்கு நம்மை அழைத்தார். விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் பதிலாக, நாம் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படக்கூடிய ஒன்று. எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் சரியாகச் செய்யாத சாதாரண மக்கள் இப்போது கடவுளின் முன்னிலையில் சுதந்திரமாக நுழைய முடியும்.

நியாயப்பிரமாணத்திலிருந்து விடுபடுவது என்பது சட்டவிரோதம் அல்லது சோம்பேறித்தனத்திற்கான அழைப்பு அல்ல. கடவுளின் வார்த்தையைக் கற்றுக்கொள்வதும், கடவுளிடமிருந்து கேட்பதும் நம் ஒவ்வொருவருடைய பொறுப்பு. ஆதியில் இருந்து அதைத் தான் கடவுள் எப்போதுமே விரும்புகிறார்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்களை நேசிக்கிறார் மேலும் நீங்கள், உங்கள் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon