“மார்த்தா, மார்த்தா”

“மார்த்தா, மார்த்தா”

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.. தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். (லூக்கா 10:41-42)

இன்றைய வசனத்தில் சொல்லப்படும் கதையில், இயேசு இரண்டு சகோதரிகளான மேரி மற்றும் மார்த்தாவைப் பார்க்கச் சென்றார். மார்த்தா அவருக்காக எல்லாவற்றையும் தயார் செய்வதில் மும்முரமாக இருந்தாள்—வீட்டை சுத்தம் செய்தல், சமைத்தல், எல்லாவற்றையும் சரியாக வைத்திருப்பதன் மூலம் ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்த முயற்சி செய்தாள். மறுபுறம், மேரி, இயேசுவுடன் ஐக்கியம் கொள்வதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தினாள். மார்த்தா தன் சகோதரியிடம் கோபமடைந்தாள். அவள் எழுந்து வந்து வீட்டு வேலைக்கு உதவ வேண்டும் என்று விரும்பினாள். அவள், இயேசுவிடம் புகார் செய்தாள். மரியாளை வேலை செய்ய சொல்லும்படி கேட்டாள்!

இயேசுவின் பதில் “மார்த்தா, மார்த்தா” என்று தொடங்கியது, இந்த இரண்டு வார்த்தைகளும் நாம் முதலில் உணர்ந்ததை விட அதிகமானதைக் குறிக்கின்றன. இந்த வசன்ங்கள் நம்மிடம் மார்த்தா உறவுகளைப் பேணுவதை விட, வீட்டு காரியங்களில் மிகவும் பிஸியாக இருந்தாள், அவள் நெருக்கத்தை விட வேலையைத் தேர்ந்தெடுத்தாள். மேலும் அவள் தனது நேரத்தை தவறாகப் பயன்படுத்தினாள் மற்றும் முக்கியமானதை தவறவிட்டாள்.

மேரி, ஞானத்தில் இயங்கிக் கொண்டிருந்தாள்; அவள் அந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டாள். அவள் தன் வாழ்நாள் முழுவதையும் சுத்தம் செய்வதில் கழிக்க முடியும். ஆனால் அன்று, இயேசு தன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை வரவேற்க வேண்டும், அவரது அன்பை உணர வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவர், அவளையும், மார்த்தாவையும் பார்க்க வந்திருந்தார். அவர்களுடைய சுத்தமான வீட்டை ஆய்வு செய்ய அல்ல. சுத்தமான வீடு முக்கியம் என்று நான் நினைக்கும் போது, அதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவல்ல. இயேசு இருந்ததால் அவர் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

ஞானத்தைப் பயன்படுத்தவும், அது கிடைக்கும்போது கடவுளின் பிரசன்னத்தைத் தவறவிடாமல் இருக்கவும் நான் இதை எனக்கு நினைவூட்டுகிறேன், உங்களையும் ஊக்குவிக்கிறேன். சில சமயங்களில் பரிசுத்த ஆவியானவர் ஜெபிக்க அல்லது அவருடைய முன்னிலையில் நேரத்தை செலவிட வேண்டியதை உணருகிறோம். ஆனால் நாம் வேலை செய்ய அல்லது விளையாட விரும்புகிறோம். அவர் அழைத்தால், நாம் உடனடியாக பதிலளிக்க வேண்டும். அவருடைய பிரசன்னத்தின் ஆசீர்வாதங்கள், நாம் செய்யக்கூடிய மற்ற எல்லா நன்மைகளையும் விட மிக அதிகம்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளின் பிரசன்னத்தை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon