அவருடைய வார்த்தையை அறிக்கை செய்யுங்கள்

அவருடைய வார்த்தையை அறிக்கை செய்யுங்கள்

உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும். (சங்கீதம் 119:172)

கடவுளுடைய வார்த்தை அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம். இது ஞானம், திசை, உண்மை மற்றும் ஒரு நோக்கம் கொண்ட, வல்லமை வாய்ந்த மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு நமக்குத் தேவையான எல்லாவற்றாலும் நிரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதை அறிக்கை செய்து, நம்முடைய ஜெபங்களில் வார்த்தையை இணைத்துக் கொள்ள வேண்டும். அறிக்கையிடுதல் என்ற வார்த்தையின் அர்த்தம் “அதே விஷயத்தை சொல்வது”, எனவே நாம் வார்த்தையை அறிக்கையிடும் போது, கடவுள் சொல்லும் அதே விஷயங்களை சொல்கிறோம்; நாம் அவருடன் உடன்படுகிறோம். நாம் உண்மையிலேயே கடவுளுடன் ஒரு ஆழமான மற்றும் துடிப்பான உறவை விரும்பினால், நாம் அவருடன் உடன்பட வேண்டும், மேலும் வார்த்தையை அறிக்கை செய்வது போன்று வேறு எதுவும் நமக்கு உதவாது. அவருடைய வார்த்தையை அறிக்கை செய்வது, வார்த்தையில் நம் அறிவையும், கடவுள் மீதுள்ள நம்பிக்கையையும் பலப்படுத்துகிறது, இது நமது பிரார்த்தனைகளின் துல்லியத்தையும், செயல்திறனையும் அதிகரிக்கிறது.

வார்த்தையை அறிக்கை செய்வதற்கு, நாம் வார்த்தையை அறிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர் என்ன செய்தார், அவர் என்ன சொன்னார் என்பதை அறிந்தால் மட்டுமே நாம் அவருடன் உடன்பட முடியும். அவர்களிடம் ஏற்கனவே உள்ளதைக் கொடுக்க அல்லது ஏற்கனவே உள்ளதை உருவாக்குமாறு கடவுளிடம் கேட்கும் நபர்களை நான் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். மேலும் நான் அப்படிப்பட்டவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன், “அப்படி ஜெபிப்பதை நிறுத்துங்கள்!” நீங்கள் அவரிடம் கேட்கும் காரியத்தை கடவுள் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று மீண்டும் கேட்க வேண்டிய அவசியமில்லை.

“கடவுளே, உமது வார்த்தையின்படி நான் ஆசீர்வதிக்கப்பட்டதற்கு நன்றி” என்று கூறுவது சிறப்பாக இருக்கும். கடவுள் ஏற்கனவே நமக்குக் கொடுத்த ஒன்றைக் கேட்கும் பிரார்த்தனைகள், முற்றிலும் தேவையற்றவை. நாம் கடவுளுடைய வார்த்தையை மீண்டும் அவரிடம் சொல்லி ஜெபிக்கும் போது அல்லது அதை நினைவில் வைக்கும் போது, நாம் அவருடைய வார்த்தையைக் கனப்படுத்துகிறோம். அந்த வார்த்தை சொல்வதை நமக்கு நினைவூட்டுகிறோம். நாம் அவருடைய வார்த்தையைப் பேசும் ஒவ்வொரு முறையும், பூமியில் ஒரு மாற்றத்தை உண்டாக்க வானத்திலிருந்து வல்லமை விடுவிக்கப்படுகிறது!


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: விசுவாசத்தில், உங்கள் வாயிலிருந்து வெளிவரும் கடவுளுடைய வார்த்தை, வானத்திலும், பூமியிலும் மிகவும் வல்லமை வாய்ந்த சக்திகளில் ஒன்றாகும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon