அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 6:7-8)
ஜெபத்தைப் பற்றி சாத்தான் மக்களிடம் சொல்லும் மிகப் பெரிய பொய்களில் ஒன்று, ஜெபம் நீண்ட நேரம் செய்ய வேண்டும் என்பதுதான். நீங்கள் உண்மையிலேயே ஜெபிப்பதற்கு பல மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் உங்களை நினைக்க வைப்பான், ஆனால் கடவுளுடைய வார்த்தையிலிருந்தும், எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தும் ஜெபங்கள் வல்லமை வாய்ந்ததாக இருக்க, அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை நான் அறிவேன். ஜெபம் வல்லமை வாய்ந்ததாக இருக்க, குறுகியதாகவும் இருக்க வேண்டியதில்லை. நம்முடைய ஜெபங்களின் நீளம் உண்மையில் கடவுளுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. நம்முடைய ஜெபங்கள், ஆவியால் வழிநடத்தப்பட்டவை, இதயப்பூர்வமானவை, உண்மையான விசுவாசத்துடன் சேர்ந்து இருப்பதுதான் முக்கியம்.
நம்முடைய ஜெபங்களின் வார்த்தைகளில், நாம் சிக்கிக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன், அதனால் நம்முடைய ஜெபங்களின் வல்லமையை இழக்க ஆரம்பிக்கிறோம். நீண்ட நேரம் ஜெபிப்பதில் தவறில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். முன்பு கூறியது போல், நாம் அனைவரும் கடவுளுடன் நீண்ட கால ஐக்கியம் மற்றும் பிரார்த்தனைக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், மேலும் கடவுளுடன் நேரத்தை செலவிட விருப்பம் அல்லது விருப்பமின்மை, அவருடனான, நமது நெருக்கத்தின் அளவை தீர்மானிக்கிறது. ஆனால், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைத் தவிர்த்து, கடமை உணர்வின் காரணமாகவோ அல்லது மாம்சத்தின் கிரியையாகவோ கடவுளிடம் பேசுவதற்கும், கேட்பதற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணி நேரங்களைச் செலவிட வேண்டும் என்று நான் நம்பவில்லை. நம் வாழ்வில் உள்ள சிக்கல்கள் உண்மையில் நீண்ட நேரம் ஜெபிக்கவும், கடவுளின் சத்தத்தைக் கேட்க நீண்ட நேரம் எடுக்கவும் தேவை என்றால், நாம் தேவையான நேரத்தை முதலீடு செய்ய வேண்டும், ஆனால் அப்படி பதிவு செய்யும் நேரத்திற்காக, நாம் நீண்ட ஜெபங்களை ஜெபிக்க வேண்டியதில்லை.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் ஜெபம் ஆவிக்குரியதாகவும், இருதய நிறைவுடையதாகவும், உண்மையான விசுவாசத்தில் பேசப்பட்ட்தாகவும் இருக்கட்டும்.