வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. (1 கொரிந்தியர் 12:4)
ஆவியின் வரங்களை விளக்குவது கடினமாக இருக்கலாம். ஏனென்றால் அவை ஆவிக்குரிய மண்டலத்தில் செயல்படுகின்றன. கடந்த சில நாட்களாக ஆராதனைகளில், அவற்றையும், அவற்றின் அடிப்படை செயல்பாட்டையும் போதுமான அளவு விவரித்திருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். ஆவிக்குரிய வரங்கள் என்ற தலைப்பில் இன்னும் நிறைய சொல்ல வேண்டும். மேலும் பரிசுத்த ஆவியின் வரங்கள் என்ற தலைப்பில் உள்ள நல்ல புத்தகங்களைப் படிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.
நாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகில் செயல்படும்போது, கவனமாக இருக்க வேண்டும், ஆனால் பயப்படக்கூடாது. சாத்தான், கடவுளின் உண்மையான வரங்களில் பல மாறுபாடுகளை கொண்டு வர முயற்சி செய்வான். ஆனால் நாம் ஜெபத்தின் மூலமும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியத்தைத் தேடுவதன் மூலமும் சரியான பாதையில் இருக்க முடியும்.
ஆவியின் வரங்களைப் பற்றி ஜெபிக்கத் தொடங்க நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவற்றில் உங்களைப் பயன்படுத்தவும், பொருத்தமாக இருப்பதை, உங்கள் வழியாகப் பாய அனுமதிக்கவும் கடவுளிடம் கேளுங்கள். உங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான அல்லது சுவாரஸ்யமான வரங்களைத் தேடாதீர்கள். ஆனால் கடவுள் உங்களுக்காக வைத்திருக்கும் வரங்களைத் தேடுங்கள்.
ஆவியின் வரங்கள் நம் மூலம் செயல்பட அனுமதிப்பது நமது அன்றாட வாழ்வில் நமக்கு உதவுகிறது மற்றும் நம்பிக்கையற்றவர்களுக்கு நமக்குள் வாசமாயிருக்கும் கிறிஸ்துவின் வல்லமையையும், நன்மையையும் நிரூபிக்கிறது. பரிசுத்த ஆவியின் வரங்கள் நம் வாழ்வில் செயல்படும்போது, இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய மற்றவர்களுக்கு நமக்கு அருளப்பட்ட கடவுளின் கிருபையின் மகிமையை நாம் பிரதிபலிக்கிறோம்.
உங்களின் சுய முன்னேற்றத்திற்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் ஆவியின் வரங்களில் செயல்பட முயலுங்கள். நீங்கள் வரங்களைத் தேடும் போது, குறிப்பாக அன்பில் நடக்க மறக்காதீர்கள். ஏனென்றால் அன்பே எல்லாவற்றிலும் மிகப் பெரிய வரம்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: பரிசுத்த ஆவியின் வரங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையின் இயல்பான பகுதியாக இருக்க வேண்டும்.