ஆவியைத் தணிக்காதீர்கள்

ஆவியை அவித்துப்போடாதிருங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:19)

இன்றைய வசனம் பரிசுத்த ஆவியை அணைக்க வேண்டாம் என்று சொல்கிறது. புகார் செய்வது ஆவியைத் தணிக்க ஒரு வழி என்று நான் நம்புகிறேன். நாம் வாழ்வில் செயல்பட பரிசுத்த ஆவியானவர் தேவை. மேலும் புகார் செய்வதை நிறுத்தவும், நன்றியுடன் இருக்கவும் நாம் எவ்வளவு அதிகமாக தேர்வு செய்கிறோமோ (புகார் செய்வதற்கு நேர்மாறாக) அவ்வளவு அதிகமாய், பரிசுத்த ஆவியானவர் நம் சூழ்நிலைகளில் செயல்பட அதிக சுதந்திரம் உள்ளது. குறை கூறுவது இயல்பு; வாழ்க்கையில் பல சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாம் சோதிக்கப்படும்போது நன்றி செலுத்துவது என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டது.

முணுமுணுத்து முறையிடுபவர்கள், கடவுளிடமிருந்து கேட்பதில்லை, ஏனென்றால் அவரைக் கேட்க, அவர்கள் புகார் செய்வதை நிறுத்த வேண்டும்! இந்த உண்மையை அறிய எனக்கு பல ஆண்டுகள் ஆனது! நான் முணுமுணுத்தேன், புகார் செய்தேன், முணுமுணுத்தேன், எல்லாவற்றிலும், எல்லோரிடமும் தவறுகளைக் கண்டேன். பின்னர் பொறாமைப்பட்டேன். ஏனென்றால் என்னைச் சுற்றியுள்ள அனைவரும் கடவுளிடமிருந்து கேட்கிறார்கள், நான் இல்லை!

“ஏன் எனக்கு எதுவும் நல்லது நடக்கவில்லை?” நான் முனகினேன்.

டேவ் என்னிடம், “ஜாய்ஸ், ஒவ்வொரு முறையும் காரியங்கள் நம் வழியில் நடக்காதபோது நீ வருத்தப்படுவதை நிறுத்தும் வரை, நம் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கப்போவதில்லை.” என்று கூறினார்.

அப்படிச் சொன்னதற்காக நான் அவர் மீது கோபமாக இருப்பேன். மேலும் நான் பின்வாங்குவேன்: “நான் எப்படி உணர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது அல்லது கவலைப்படவில்லை!” என்று சொல்வேன்.

பிரச்சனை என்னவென்றால், நான் எப்படி உணர்கிறேன் என்பதில் எனக்கு அதிக அக்கறை இருந்தது மற்றும் எனக்கு உதவி செய்வதாக கடவுள் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிக் கொண்டது போதவில்லை. நம்முடைய பிரச்சனையில் நமக்கு உதவ கடவுள் முன் வருகிறார், மேலும் நம்முடைய சோதனைகளின் போது நாம் பொறுமையாக இருந்தால், (நல்ல மனப்பான்மையுடன்) என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறார். புகார் செய்வது பொறுமையின் அடையாளம் அல்ல, ஆனால் நன்றி செலுத்துவது அதன் அடையாளம். என் உணர்வுகளை விட கடவுளுடைய வார்த்தையின்படி வாழ நான் கற்றுக் கொண்ட போது, கடவுளின் சத்தத்தை நான் இன்னும் தெளிவாகக் கேட்டேன். புகார் செய்வது எதிரிக்கு ஒரு கதவைத் திறக்கிறது, ஆனால் நன்றியுடன் இருப்பது, கடவுளுக்கு மறு கதவைத் திறக்கிறது.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: புகார் செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியைத் தணிக்காதீர்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon