உங்கள் அதிகாரத்தை உபயோகியுங்கள்

உங்கள் அதிகாரத்தை உபயோகியுங்கள்

“இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.” – லூக்கா 10:19

மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை நாம் ஒருபோதும் கையாள மாட்டோமென்று இயேசு வாக்குறுதி அளிக்கவில்லை. யோவான் 16:33 ல் அவர் சொன்னார்,… உலகில் உங்களுக்கு உபத்திரவமும், சோதனைகளும், துன்பமும், விரக்தியும் உண்டு…. ஆனால் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்று சொல்லுகிறார்.

இந்த வசனம், உலகத்தாரைப் போல் நாம் மன அழுத்தத்திற்குள்ளாக வேண்டிய அவசியம் இல்லை என்பதை நமக்குக் கற்பிக்கிறது. இயேசு, நம்மை துன்பத்திற்குள்ளாக்கும் வல்லமையை உடைத்துப் போட்டார். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் எதிர் கொள்ளலாம்.

லூக்கா 10:19 கூறுகிறது, இதோ! சத்துரு கொண்டிருக்கும் வல்லமை அனைத்தின் மீதும், நான் உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளேன்…; எதுவும் உங்களுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காது. அவர் செய்ததைப் போலவே நாமும் உலகை வெல்ல அவர் நம்மை ஆயத்தப்படுத்தியுள்ளார்.

கையாள எளிதாக இல்லாத சவாலான மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்வோம் என்றாலும், அவருடைய வழியில் காரியங்களை கையாண்டால் எதுவும் தோற்கடிக்க முடியாது என்று இயேசு நமக்கு உறுதியளிக்கிறார் – கிறிஸ்துவில் உங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள், உங்கள் தடைகளை வெல்லுங்கள்!


ஜெபம்

தேவனே, கிறிஸ்துவில் நீங்கள் எனக்குக் கொடுத்த அதிகாரத்தையும், வல்லமையையும் நான் பெற்றுக் கொள்கிறேன். உமது அதிகாரத்தில் நான் எப்படி நடந்து கொள்வது என்பதை எனக்குக் காட்டும். இயேசு செய்ததைப் போல நானும் இந்த உலகத்தின் சோதனைகளையும், சவால்களையும் சமாளிக்க உதவுவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon