உடன்படிக்கையில் ஜெபியுங்கள்; உடன்படிக்கையில் வாழுங்கள்

உடன்படிக்கையில் ஜெபியுங்கள்; உடன்படிக்கையில் வாழுங்கள்

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்! (மத்தேயு 5:9)

ஜெபத்தில் உடன்படுபவர்கள், தங்கள் இயல்பான, அன்றாட வாழ்வில் உடன்படிக்கையில் வாழும்போது மட்டுமே உடன்படிக்கையின் ஜெபம் பயனுள்ளதாக இருக்கும். உடன்படிக்கையில் வாழ்வது என்பது நமது சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருக்கக் கூடாது என்பதல்ல, ஆனால் அது, நமது உறவுகளில் நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை ஆகியவற்றைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. சுயநலம், கோபம், மனக்கசப்பு, பொறாமை, கசப்பு அல்லது ஒப்பீடு போன்ற பிரிவு மற்றும் சண்டையை ஏற்படுத்தும் விஷயங்கள் இல்லாததை இது குறிக்கிறது. உடன்படிக்கையில் வாழ்வது என்பது ஒரே அணியில் இருப்பது போன்றது-அனைவரும் ஒன்றாக வேலை செய்கிறார்கள், ஒருவரையொருவர் ஆதரிக்கிறார்கள் மற்றும் ஊக்குவிக்கிறார்கள், ஒருவரையொருவர் நம்புகிறார்கள் மற்றும் அவர்கள் அனைவரும் ஒரே இலக்கைத் தொடரவும் வெற்றியைப் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள்.

உடன்படிக்கையின் பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது, ஆனால் உடன்படிக்கையில் வாழ முயற்சி செய்பவர்களால் மட்டுமே அதை திறம்பட பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, டேவும், நானும் வாதிட்டு, சண்டை சச்சரவுகள் ஏற்பட்டிருக்கும் சூழலில், எங்களுக்கு அவசரத் தேவை இருக்கும்போது, உடன்படிக்கையில் ஜெபிக்க விரும்பினால், அது வேலை செய்யாது. எப்போதாவது ஒத்துக்கொள்ளுவதில் சக்தி இல்லை; நாம் உடன்படிக்கையில் வாழ வேண்டும். மற்றவர்களுடன் மரியாதையுடனும், அமைதியாகவும் வாழுங்கள். சமாதானத்தை உருவாக்குபவராகவும், பராமரிப்பவராகவும் இருப்பதற்காக, மனிதர்களுக்கும், விஷயங்களுக்கும் தகுந்தவாறு உங்களைத் அமைத்துக் கொள்ளுங்கள் (ரோமர் 12:16ஐப் பார்க்கவும்).

ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு முயற்சி தேவை, ஆனால் உடன்படிக்கையில் வாழும் மக்கள் ஜெபிக்கும் போது வெளியாகும் வல்லமை மதிப்புக்குரியது.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் வருத்தப்பட்ட பிறகு, அமைதியாக இருப்பதை விட, வருத்தப்படாமல் இருப்பது எளிது.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon