ஒருபோதும் கைவிடாதே

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். (கலாத்தியர் 6:9)

மக்கள், கடவுளுடைய சத்தத்தைக் கேட்காததற்கு ஒரு காரணம், அவர்கள் மிக விரைவில் விட்டு விடுவதுதான். பவுலும் சீலாவும் நள்ளிரவில் தங்கள் சிறை அறையில் கடவுளை வணங்கி துதித்துக் கொண்டிருந்தனர் (அப்போஸ்தலர் 16:25ஐப் பார்க்கவும்). முன்பே பல பேர் கைவிட்டு தூங்குவதற்கு சென்றிருப்பார்கள். நமது குறிக்கோள்: “ஒருபோதும் விட்டு விடாதது.”

எதுவாக இருந்தாலும் கடவுளிடம் பேசுவதையும், அவர் உங்களிடம் பேசுவதற்கு காத்திருப்பதையும் விட்டுவிடாதீர்கள் என்று நான் உங்களை ஊக்குவிக்கிறேன். தினமும் கடவுளுடன் நேரத்தை செலவிடுங்கள். விட்டு விட மறுக்கும் ஒருவன், சாத்தானால் தோற்கடிக்க முடியாத ஒருவன். நீங்கள் இப்போதே இது போன்ற விஷயங்களைச் சொல்வதை கைவிட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்:

  • “எனக்கு சிறந்த வேலை கிடைக்காது.”
  • “எனக்கு ஒருபோதும் திருமணம் நடக்காது.”
  • “நான் ஒருபோதும் கடனில் இருந்து மீள மாட்டேன்.”
  • “நான் ஒருபோதும் எடையை இழக்க மாட்டேன்.”

இது போன்ற அணுகுமுறைகள், நாம் எதையும் பெற மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கலாம்! ஆனால், “கடவுள் அவருடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவர், நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்” என்று சொல்லும் மனப்பான்மையை நாம் தேர்ந்தெடுக்கலாம். மக்கள் தங்கள் பிரார்த்தனைகளின் முடிவுகளைப் பார்க்காததற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று, அவர்கள் கைவிடுவதுதான். சரியான நேரத்தில் அறுவடை செய்வோம், ஆனால் அது எந்த நேரம்? நாம் எதைக் கேட்கிறோமோ அதைப் பெற நாம் தயாராக இருக்கிறோம் என்பதை கடவுள் குறித்திருக்கும் நேரம். அதுவரை விசுவாசமாக இருப்பதே, நமது ஒரே வேலை. தொடர்ந்து ஜெபித்து, கீழ்ப்படிந்து இருங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் நமக்கு வாய்ப்புகளை வழங்குகிறார். எனவே உங்களுக்கு ஒரு புதிய தொடக்கம் தேவைப்பட்டால், இன்றே அதற்கான நாள்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon