கடவுளை அவருடைய வார்த்தையின் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்

கடவுளை அவருடைய வார்த்தையின் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்

எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. (ஏசாயா 62:6)

இன்றைய வசனம், கடவுள் நமக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும்படி அறிவுறுத்துகிறது. அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று அவருடைய வார்த்தையை அவரிடம் சொல்லி ஜெபிப்பதாகும். கடவுளுடைய வார்த்தை அவருக்கு மிகவும் மதிப்பு மிக்கது மற்றும் நமக்கும் அவ்வாறே இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தம் வார்த்தையின் மூலம் நம்மிடம் தெளிவாகப் பேசுகிறார். அவருடைய சத்தத்தைக் கேட்பதற்கு இது ஒரு நம்பகரமான வழியாகும். உண்மையில், விரிவுபடுத்தப்பட்ட வேதாகமம் சங்கீதம் 138:2ஐ பின்வருமாறு மொழிபெயர்க்கிறது: “உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்!” இந்த வசனம், தேவன் தம்முடைய நாமத்துக்கும் மேலாக அவருடைய வார்த்தையைப் பெரிதாக்குகிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அவர் அந்த அளவிற்கு அதை மதிக்கிறார் என்றால், நாம் வார்த்தையை அறிவதற்கும், வார்த்தையைப் படிப்பதற்கும், வார்த்தையை நேசிப்பதற்கும், வார்த்தையை நம் இருதயங்களில் ஆழமாக வேரூன்றவும், எல்லாவற்றையும் விட வார்த்தையை அதிகமாக மதிப்பதற்கும், நம்முடைய பிரார்த்தனைகளில் வார்த்தையை இணைத்துக் கொள்வதற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நான் இப்போது விவரித்தபடி நாம் வார்த்தைக்கு மதிப்பளித்து, அதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, நாம் அதில் “நிலைத்திருப்போம்” (யோவான் 15:7 ஐப் பார்க்கவும்). வார்த்தையில் நிலைத்திருப்பதும், அந்த வார்த்தை நம்மில் நிலைத்திருக்க அனுமதிப்பதும், நம்பிக்கையுள்ள ஜெபத்திற்கும், நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கப்படுவதுடனும் நேரடியாக தொடர்புடையது. நாம் கடவுளுடைய வார்த்தையை சொல்லி ஜெபிக்கும்போது, நமக்காக கடவுளுடைய சித்தம் இல்லாத விஷயங்களுக்காக ஜெபிப்பது குறைகிறது. இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள வார்த்தையாக இருக்கிறார் (பார்க்க யோவான் 1:1-4). மேலும் நாம் வார்த்தையில் நிலைத்திருக்கும்போது, நாம் அவரில் நிலைத்திருக்கிறோம்-அது நம் ஜெபங்களுக்கு சொல்லமுடியாத வல்லமையைக் கொண்டு வருகிறது.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளுடைய வார்த்தை உங்கள் மனதை புதுப்பித்து, அவர் நினைப்பது போல் சிந்திக்க கற்றுக் கொடுக்கிறது.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon