கடவுளை அவருடைய வார்த்தையின் மூலம் கேளுங்கள்

கடவுளை அவருடைய வார்த்தையின் மூலம் கேளுங்கள்

உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். (சங்கீதம் 119:38)

கடவுள் தம் வார்த்தையின் மூலம் நம்மிடம் பேசுகிறார். அவருடைய வார்த்தை, நமக்கு உதவவும், நம்மை வழிநடத்தவும், நம் அன்றாட வாழ்வில் நம்மை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்க முடியும், ஏனென்றால் பல்வேறு சூழ்நிலைகளில் ஜெபிக்க, வேதத்தில் வசனங்கள் அல்லது பகுதிகளைக் காணலாம். சில சமயங்களில், வசனங்கள் அல்லது பகுதிகள் நமக்கு குறிப்பிடத்தக்க வகையில், ஒரு விரிவான வழிகாட்டுதலைக் கொடுக்கும். மற்ற சமயங்களில், ஞானம் அல்லது ஒரு பொதுவான ஆவிக்குறிய கொள்கையை எடுத்து, நாம் கையாளும் விஷயத்தில் அதைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கீழே பட்டியலிடப்பட்டுள்ள பல பொதுவான, குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் உணர்ச்சிகளால் எதிரி நம்மை அச்சுறுத்தும் போதும், மற்ற சந்தர்ப்பங்களிலும் ஜெபிப்பதற்கான பொருத்தமான வசனங்கள்:

  • நீங்கள் ஒரு கடினமான பருவத்தில் இருக்கும் போது அல்லது அது உங்களை சோர்வடையச் செய்யும் போது, நீங்கள் ஏசாயா 40:29க் கொண்டு: ஜெபிக்கலாம். “பலவீனமானவர்களுக்கு அவர் பலம் கொடுக்கிறார், வலிமை இல்லாதவர்களுக்கு அவர் பலத்தை அதிகரிக்கிறார்.”
  • எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படும்போது, எரேமியா 31:17-ஐ கொண்டு ஜெபிக்கலாம், அதில் “உங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கை இருக்கிறது.”
  • நீங்கள் பொருளாதார ரீதியாக சிரமப்படும்போது, சங்கீதம் 34:9-10ஐ வைத்து ஜெபிக்கலாம், அது இவ்வாறு கூறுகிறது, “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.”

கடவுளுடைய வார்த்தை நம்மிடம் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதிலையும், ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்வதற்கான ஞானத்தையும் கொண்டுள்ளது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உணர்ச்சிகள் உங்களை வழிதவறச் செய்யலாம். ஆனால் கடவுளுடைய வார்த்தை உங்களைப் பாதுகாப்பிற்கு அழைத்துச் செல்கிறது.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon