
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். (1 யோவான் 5:14)
நீங்கள் ஜெபத்தில் தேவனை அணுகும்போது, தன்னம்பிக்கையால் நிரப்பப்பட உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். நாம் ஜெபத்தில் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், தவறு செய்ய பயப்படும் வரை அது நடக்காது. அவருடைய சித்தத்தின்படி நாம் ஜெபித்திருந்தால், அவர் நமக்குச் செவிசாய்ப்பதாகவும், பதிலளிப்பதாகவும் அவர் உறுதியளிக்கிறார். ஆனால் அவருக்கு விருப்பமில்லாத ஒன்றை நாம் கேட்டால் என்ன செய்வது? நம்மால் இயன்ற வரை கடவுளின் சித்தத்தின்படி நாம் ஜெபிக்க வேண்டும், ஆனால் நம் இருதயத்தில் உள்ள காரியங்களைக் கடவுளிடம் கேட்க பயப்படும் அளவுக்கு எதிரி நம்மை மிகவும் பயத்தில் சிக்க வைக்க அனுமதிக்கக்கூடாது.
தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக நாம் ஜெபித்தால், அதனால் நடக்கக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால், நாம் கேட்பது நமக்குக் கிடைக்காது – அது நமது நன்மைக்காகவே! தேவன் நம் இருதயத்தை அறிந்திருக்கிறார், நாம் தவறு செய்து, அவருக்கு விருப்பமில்லாத ஒன்றைக் கேட்டால் அவர் கோபப்பட மாட்டார். நாம் தவறிழைத்து விடுவோமோ அல்லது அதிகமாகக் கேட்டால் அவர் மகிழ்ச்சியடைய மாட்டாரோ என்ற பயத்துடன் அவரை அணுக வேண்டிய அவசியமில்லை. என்னுடைய வழி என்னவென்றால், எனக்கு என்ன வேண்டும் மற்றும் என்ன தேவை என்று கடவுளிடம் கேட்பது, எப்போதும் அவருடைய வார்த்தையை என்னால் முடிந்தவரை கடைப்பிடிப்பது, பின்னர் அதை மற்றவர்களுக்குக் கூறுவது, “கடவுளே, நான் கேட்டது ஏதாகிலும் எனக்கு சரியாக இருக்காது என்றால், அதை நீர் கொடுக்க மாட்டீர் என்று நான் நம்புகிறேன்.” விசுவாசத்துடனும், தைரியத்துடனும், அவருடைய பதிலைப் பெற எதிர்பார்த்து அவரிடம் செல்லுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கேளுங்கள்.