சிறிய விஷயங்கள், பெரிய விஷயங்கள்

சிறிய விஷயங்கள், பெரிய விஷயங்கள்

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். (சங்கீதம் 143:8)

என் வாழ்க்கையில் பெரிய நிகழ்வுகளிலும், முடிவுகளிலும் கடவுளை நம்பவும் அவருடைய சத்தத்தைக் கேட்கவும் நான் கற்றுக்கொண்ட ஒரு வழி, சிறிய விஷயங்களில் அவருடைய சத்தத்தைக் கேட்பது. ஒரு முறை நானும், டேவும் சில குடும்ப உறுப்பினர்களுடன் திரைப்படம் பார்க்கத் தயாரானோம். ஆனால் எங்களால் ரிமோட் கண்ட்ரோலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது இல்லாமல் படத்தை எப்படி இயக்குவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனவே அனைவரும் அதை விடாமுயற்சியுடன் தேடினர், ஆனால் எங்களால் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

நான் பிரார்த்தனை செய்ய முடிவு செய்தேன். அதனால் நான் என் இருதயத்தில் அமைதியாக, “பரிசுத்த ஆவியானவரே, ரிமோட் கண்ட்ரோல் எங்குள்ளது என்பதை எனக்குக் காட்டுங்கள்” என்றேன். உடனடியாக, நான் குளியலறையைப் பற்றி நினைத்தேன் – அங்குதான் நாங்கள் அதைக் கண்டுபிடித்தோம்.

என்னுடைய கார் சாவியிலும் எனக்கு இதே தான் நடந்தது. நான் எல்லா இடங்களிலும் தேடினேன், ஆனால் பயனில்லை. பின்னர் நான் பிரார்த்தனை செய்தேன், என் ஆவியில் எனது காரின் முன் இருக்கையில் சாவிகள் இருந்ததைக் கண்டேன்.

இந்த இரண்டு கதைகளும் “அறிவின் வார்த்தை” (1 கொரிந்தியர் 12:8) என்று அழைக்கப்படும் பரிசுத்த ஆவியின் வரத்தின் எடுத்துக்காட்டுகள். ரிமோட் கண்ட்ரோல் மற்றும் எனது சாவிகள் பற்றிய அறிவை கடவுள் எனக்கு வழங்கினார். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட அனைவருக்கும் இந்தப் பரிசும், மற்றவையும் கிடைக்கும். பரிசுகள் என்பது, இயற்கையான வாழ்க்கையை இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகளில் வாழ்வதற்கு, விசுவாசிகளுக்கு கொடுக்கப்படும் அமானுஷ்ய சக்தியாகும்.

கடவுள் நம்மை நேசிக்கிறார். அவர் நம்மிடம் பேசுவதற்கு போதுமான அக்கறை காட்டுகிறார் (என்னைப் பொறுத்தவரையில், ரிமோட்டைப் பற்றி எனக்கு ஒரு சிந்தனையைத் தருவது மற்றும் எனது கார் சாவியைப் பற்றிய ஒரு படத்தை அல்லது பார்வையை எனக்குக் காண்பிப்பதாகும்). நம்முடைய வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களைப் பற்றி பேசுகிறார். பெரிய விஷயங்களைப் பற்றியும் நம்மிடம் பேசுவதற்கு அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறார் என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களைக் கூட அவர் உங்களிடம் பேச விரும்புகிறார்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon