ஞானத்தின் வார்த்தை

ஞானத்தின் வார்த்தை

எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும். (1 கொரிந்தியர் 12:8)

1 கொரிந்தியர் 1:30, இயேசு, கடவுளிடமிருந்து “நமக்கு ஞானமாக உண்டாக்கப்பட்டார்” என்று கூறுகிறது. நீதிமொழிகள் புத்தகத்தின் எழுத்தாளர் ஞானத்தைத் தேடுங்கள், அதைப் பெறுவதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஞானம் எல்லா மக்களுக்கும் கிடைக்கிறது. ஆனால் “ஞானத்தின் வார்த்தை” என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.

எல்லா ஞானமும் கடவுளிடமிருந்து வந்தது. மேலும் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் அறிவுபூர்வமாக அடையக்கூடிய ஒரு ஞானமும் உள்ளது. அது இன்றைய வசனத்தில் சொல்லப்பட்ட ஞான வார்த்தை அல்ல. ஞானத்தின் வார்த்தை, ஆவிக்குறிய வழிகாட்டுதலின் ஒரு வடிவம். அது செயல்படும் போது, ஒரு குறிப்பிட்ட சிக்கலை புத்திசாலித்தனமான முறையில் எவ்வாறு கையாள்வது என்பதை ஒரு நபருக்கு கற்றுக் கொடுக்கிறது. அது இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் காணப்படுகிறது மேலும் அது தேவனுடைய சித்தத்தோடு இணைந்திருக்கிறது.

நாம் அறியாமலேயே இந்த வரங்கள் நமக்குள் செயல்படுகிறது. நமக்கு சாதாரணமாகத் தோன்றும் ஒன்றை நாம் ஒருவரிடம் கூறலாம். ஆனால் கேட்பவருக்கு அது அவருடைய அல்லது அவள் நிலைமைக்கு ஒரு அற்புதமான ஞான வார்த்தையாக இருக்கலாம்.

குழந்தைகளிடமிருந்து நான் ஞான வார்த்தைகளைப் பெற்றிருக்கிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் என் கவனத்தை ஈர்க்க முயன்றார். மேலும் அவர் பேசுவதை நான் அறியும் ஒரு வழியைப் பயன்படுத்தினார். ஞான வார்த்தைகள் மூலம் கடவுளின் வழிகாட்டுதலை கேளுங்கள் மற்றும் அதை எதிர்பார்க்கவும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: ஞானத்தைத் தேடுங்கள், ஏனென்றால் சரியான நேரத்தில் பேசப்படும் ஞானத்தின் ஒரு வார்த்தை, வாழ்க்கையையே மாற்றும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon