
மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. (மத்தேயு 23:25)
தம்முடைய நாட்களிலிருந்த, மதத் தலைவர்களை இயேசு அடிக்கடி கண்டித்தார். ஏனென்றால் அவர்கள் நிறைய நற்செயல்களைச் செய்தாலும், தவறான உள்நோக்கத்துடன் செய்தார்கள். எப்போதும் மதத்தை சார்ந்த வேலைகளை செய்பவர் கடவுளுக்கு நெருக்கமானவர் என்று அர்த்தமல்ல. மதச் செயல்பாடுகள் கடவுளுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதிலிருந்தும், அவர் நம்மிடம் பேசுவதைக் கேட்பதிலிருந்தும் நம்மைத் தடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
கடவுளோடு நாம் நெருக்கம் கொள்வதற்கான வழியைத் திறக்க இயேசு மரித்தார், அது எப்போதும் எந்த நல்ல செயல்களுக்கும் முன் வர வேண்டும். நம் இருதயங்கள் கடவுளிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது மதம் சம்பந்தப்பட்ட காரியங்களைச் செய்வது உண்மையில் சாத்தியமாகும். நாம் அடிக்கடி “உந்துதல் சோதனைகளை” செய்ய வேண்டும். மதம் சார்ந்த பணிகளில் நாம் என்ன செய்கிறோம் என்பதை விட, நாம் ஏன் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறோம் என்பதில் கடவுள் அதிக அக்கறை காட்டுகிறார். விதவைகள் மற்றும் அனாதைகளை அவர்களின் துன்பத்தில் சந்திக்கவும், அவர்களுக்கு உதவவும், அவர்களைக் கவனித்துக் கொள்வதுமே உண்மையான மதம் என்று அவர் கூறினார் (யாக்கோபு 1:27 ஐப் பார்க்கவும்). நீண்ட, சொற்பொழிவாளராய் பிரார்த்தனைகளால் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்க விரும்புவதை விட, காயமடைந்திருக்கும் மனிதர்களிடம் நாம் உண்மையான அன்பும், அக்கறையும் காட்ட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
மதவாதிகள் கடவுளுக்குச் சேவை செய்வதற்குப் பதிலாக, தங்கள் நற்பெயரை அதிகரிக்க பல காரியங்களைச் செய்கிறார்கள். அவர்கள் எல்லாவிதமான நற்செயல்களிலும் ஈடுபடலாம், ஆனால் அவர்கள் எப்போதாவது, தங்கள் இருதயங்களை கடவுளுடன் பகிர்ந்துகொள்வதில் அல்லது அவர்களை அவருடன் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பதில் அரிதாகவே ஈடுபடுவார்கள். இந்த மக்கள், கடவுளின் சத்தத்தை உண்மையாகக் கேட்பது அல்லது அவருடன் ஆழ்ந்த தொடர்பை அனுபவிப்பது அரிது.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளுடனான உங்கள் உறவில் கவனம் செலுத்துங்கள், மதத்தில் அல்ல.