தேவனுடைய வழியில் வாழுங்கள்

தேவனுடைய வழியில் வாழுங்கள்

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். (சங்கீதம் 86:11)

நாம் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, அவருடைய வழியில் வாழ்ந்து, அவரைச் சேவிப்பதைத் தேர்ந்தெடுத்தால், அவருடனான நீண்ட மல்யுத்தப் போட்டிகளைத் தவிர்க்கலாம். கடவுள் நம்மில் செய்ய விரும்புவதை செய்ய நாம் அவரை நம்மில் அனுமதிக்க வேண்டும் என்று ஞானம் சொல்கிறது, எனவே நாம் எப்போதும் ஒரே “மலையை” சுற்றி சுற்றி வர வேண்டியதில்லை (உபாகமம் 2:3 ஐப் பார்க்கவும்). இருபது முப்பது வருடங்களாக இதே போன்ற தடைகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஆரம்பத்திலேயே கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே தங்கள் வாழ்க்கையை மாற்றியிருப்பார்கள்.

தேவன் நம்மைக் கண்டடையும் போது, நாம் எவ்வளவு மகிழ்ந்தாலும், அவர் நம்மை அங்கேயே இருக்க விடமாட்டார். அவர் நம்மை அழைத்துச் செல்ல புதிய இடங்களையும், நமக்கு கற்பிக்க புதிய பாடங்களையும் வைத்திருக்கிறார். அவர் நம்மை, நம்முடைய முழு வாழ்க்கையிலும், வளர்ச்சியிலும், அவருடைய நோக்கங்கள் மற்றும் திட்டங்களில் நிறைந்திருக்க விரும்புகிறார்.

கடவுள் நம்மிடம், “நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்க மாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன். நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன். அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்” என்று சொல்லுகிறார் (நீதிமொழிகள் 1:24-28 ஐப் பார்க்கவும்).

கடவுள் இரக்கமுள்ளவர், நீடிய பொறுமையுள்ளவர், ஆனால் நாம் அவருக்குக் கீழ்ப்படிவது மட்டுமே தேவை என்பதை உணர வேண்டிய ஒரு நேரம் வருகிறது. எவ்வளவு சீக்கிரம் நாம் கீழ்ப்படிந்து, கடவுளின் வழியில் வாழத் தொடங்குகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நம் வாழ்க்கையைத் தொடரவும், கடவுளின் நல்ல திட்டங்களில் முன்னேறவும் முடியும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: ஜெபியுங்கள், கீழ்ப்படியுங்கள், தாமதிக்காதீர்கள்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon