நாம் கேட்கும் முன்பே அதற்கு கடவுளிடம் பதில் இருக்கிறது

நாம் கேட்கும் முன்பே அதற்கு கடவுளிடம் பதில் இருக்கிறது

ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன். (2 சாமுவேல் 22:4)

யோசபாத் ஒரு பயங்கரமான போரை எதிர்கொண்டபோது, தேவனை அணுகி, முதலில், அவர் எவ்வளவு பெரியவர், அற்புதமானவர், வல்லமை வாய்ந்தவர் என்று சொல்லி அவரைத் துதித்தார். தம் மக்களைப் பாதுகாப்பதற்கும் அவருடைய வாக்குறுதிகளை நிலைநிறுத்துவதற்கும் கடந்த காலத்தில் தேவன் செய்த குறிப்பிட்ட வல்லமையான செயல்களை அவர் விவரிக்கத் தொடங்கினார். அதற்குப் பிறகு, கடவுளிடம் தனது கோரிக்கையை முன்வைத்தார். தேவன் பிரச்சனையை கையாள்வார் என்ற முழு நம்பிக்கையை வெளிப்படுத்தி தொடங்கினார். பிறகு இவ்வாறு எளிமையாகச் சொன்னார், “தேவனே, பரம்பரையாக நீர் எங்களுக்குக் கொடுத்த உடைமையைப் பறிக்க எங்கள் எதிரிகள் எங்களுக்கு எதிராக வருகிறார்கள். இந்த சிறிய பிரச்சனையை குறிப்பிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் நீர் மிகவும் சிறந்தவர்: நீர் முன்பே இந்த நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கிறீர் என்பது எனக்குத் தெரியும்”.

நாம் தேவனிடம் உதவி கேட்கும் போது, முதலில் நாம் கேட்கும் போது அவர் அதைக் கேட்கிறார் என்பதை உணர வேண்டும். அதையே திரும்பத் திரும்பக் கேட்டு ஜெப நேரத்தைச் செலவிட வேண்டிய அவசியமில்லை. நமக்கு என்ன வேண்டும் அல்லது தேவை என்று கடவுளிடம் கேட்பது சிறந்தது என்று நான் நினைக்கிறேன், அது மீண்டும் நம் நினைவுக்கு வரும்போது, அவர் செயல்படுகிறார் என்பதற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். நாம் அவரை நம்புகிறோம், அவருடைய நேரம் சரியானதாக இருக்கும் என்பதை நாம் அவரிடம் சொல்ல வேண்டும்.
உங்கள் பிரச்சனைகள் தோன்றுவதற்கு முன்பே உங்கள் விடுதலைக்காக கடவுள் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். கடவுள் ஒருபோதும் ஆச்சரியப்படுவதில்லை! அவரை தொடர்ந்து நோக்கிப் பாருங்கள்; ஆராதனை, துதி, மற்றும் உதவி வரும் வழியில் அவருக்கு நன்றி செலுத்துங்கள்; உங்களுடைய போரில் வெற்றியை நோக்கி அவர் உங்களை வழிநடத்தும் போது, அவருடைய சத்தத்தைக் கேட்டுக் கொண்டே இருங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளுக்கு நம் நினைவூட்டல்கள் தேவையில்லை, ஆனால் அவருக்கு நம் துதி தேவை.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon