அற்புதங்களைச் செய்வது

அற்புதங்களைச் செய்வது

எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 12:8-10)

இயேசு பல அற்புதங்களைச் செய்தார். உதாரணமாக, அவர் தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார் (பார்க்க யோவான் 2:1-10) மேலும் ஒரு சிறுவனின் மதிய உணவைக் கொண்டு ஒரு கூட்டத்திற்கு உணவளித்தார் (பார்க்க யோவான் 6:1-13). பல வகையான அற்புதங்கள் உள்ளன – தேவைகள் சந்திக்கப்படும் அற்புதங்கள், குணப்படுத்தும் அற்புதங்கள் மற்றும் விடுதலையின் அற்புதங்கள் போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.

டேவும், நானும் பல வருடங்களாக பல அற்புதங்களைக் கண்டிருக்கிறோம். உடல் நலம் மற்றும் நீண்டகால அடிமைத்தனங்களில் இருந்து விடுபடுதல் போன்ற அற்புதங்களை நாங்கள் நிச்சயமாக பார்த்திருக்கிறோம். தேவைகள் சந்திக்கப்படும் அற்புதங்களையும் நாங்கள் அனுபவித்திருக்கிறோம்—கடவுள் எங்களுக்காகவும், எங்களது ஊழியத்திற்காகவும், இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் வழங்கிய நேரங்கள், கடவுள் தாமே எங்கள் சூழ்நிலையில் தலையிட்டு எங்களுக்குத் தேவையானதை அளித்தார் என்பதை நாங்கள் அறிவோம்.

அற்புதங்கள் என்பது விளக்க முடியாத விஷயங்கள். சாதாரண வழிமுறைகளால் நிகழாத விஷயங்கள். நம் வாழ்வில் நடக்கும் அற்புதங்களுக்காக நாம் அனைவரும் கடவுளை நம்பலாம் மற்றும் நம்ப வேண்டும். அற்புதங்களின் வரம் கிடைக்கும்போது சாதாரண வாழ்க்கை வாழ்வதில் திருப்தி அடையாதீர்கள். உங்கள் வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் கடவுள் அற்புதமாக செயல்படுவார் என்பதை எதிர்பாருங்கள். அதை அவரிடம் கேளுங்கள். செங்கடலைப் பிரித்த அதே கடவுள் இன்று உங்களுக்கு உதவ விரும்புகிறார்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: சாதாரணமானதை எதிர்பார்க்காதீர்கள், ஆனால் அசாதாரணமானதை எதிர்பார்க்கலாம்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon