எந்த நேரத்திலும், எங்கும்

எந்த நேரத்திலும், எங்கும்

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:17)

நாம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஜெபிக்கலாம். எங்களுடைய அறிவுரை, “எல்லா நேரங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், ஒவ்வொரு காலத்திலும் ஜெபிக்க வேண்டும்” மற்றும் “இடைவிடாமல் ஜெபத்தில் இருக்க வேண்டும்” என்பதே. ஆனால், ஒரு மூலையில் நின்று, நாள் முழுவதும் தேவனிடம் பேசுவதிலும், கேட்பதிலும் நேரத்தை நாம் செலவிட முடியாது என்பதை நாங்கள் அறிவோம். அப்படிச் செய்தால் நம் வாழ்க்கையை நாம் வாழ முடியாது. ஜெபம் என்பது சுவாசிப்பது போல் இருக்க வேண்டும்-வழக்கமானதாக, எளிதாக-நாம் வாழும் வழியின் ஒரு பகுதியாக, நம் வாழ்வில் பிரார்த்தனை செய்ய வேண்டும். உண்மையில், நமது சரீரப்பிரகாரமான வாழ்க்கை, சுவாசிப்பதன் மூலம் பராமரிக்கப்படுவது போல், நமது ஆவிக்குறிய வாழ்க்கையும் ஜெபிப்பதன் மூலம் பராமரிக்கப்பட வேண்டும். நாம் சத்தமாக ஜெபிக்கலாம் அல்லது அமைதியாக ஜெபிக்கலாம். நாம் உட்கார்ந்து, எழுந்து நின்று அல்லது நடந்து ஜெபிக்கலாம். நாம் நகரும் போதும் அல்லது அசையாமல் இருக்கும் போதும் கடவுளிடம் பேசவும், கேட்கவும் முடியும். நாம் ஷாப்பிங் செய்யும் போது, சந்திப்பிற்காக காத்திருக்கும் போது, வணிகக் கூட்டத்தில் பங்கேற்கும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும்போது, வாகனம் ஓட்டும்போது அல்லது குளிக்கும் போது ஜெபிக்கலாம். “ஆண்டவரே, நீர் செய்யும் அனைத்திற்கும் நன்றி,” அல்லது “கடவுளே, நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும்,” அல்லது “ஓ, இயேசுவே, மிகவும் சோகமாக இருக்கும் அந்த பெண்ணுக்கு உதவும்” என்று நாம் ஜெபிக்கலாம். உண்மையில், பிரார்த்தனைக்கான இந்த அணுகுமுறை தான் கடவுளின் விருப்பம். நாம் ஜெபிக்க மறந்து விடுவோம் என்ற நம்பிக்கையில், நாம் அதை தள்ளிப்போட வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். உங்கள் இருதயத்தில் ஏதாவது வரும் போது உடனடியாக ஜெபிக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இது நாள் முழுவதும், கடவுளுடன் நெருக்கமாக இருக்க உதவும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளுடன் தொடர்ந்து பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon