நமக்கு ஒரு வழிகாட்டி தேவை

நமக்கு ஒரு வழிகாட்டி தேவை

இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார். (சங்கீதம் 48:14)

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார் என்பதை அறிவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நமக்கு வழிகாட்டும் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிவது எவ்வளவு அற்புதமானது. மேலும் வாழ்க்கையில் ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்குச் செல்வதை உறுதிசெய்கிறோம்.

சில சமயங்களில் நானும், டேவும் பயணிக்கும் போது, பார்க்க வேண்டிய சிறந்த மற்றும் மிக முக்கியமான தளங்களைக் காண்பிப்பதற்கான வழிகாட்டியை நாங்கள் அமர்த்துவோம். ஒரு முறை, ஒரு குறிப்பிட்ட இடத்தை நாங்களே ஆராய்யலாம் என்று முடிவு செய்தோம்; அதை நாங்கள் நியாயப்படுத்தினோம், நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதைச் செய்ய விரும்பும் போது அதைச் செய்யலாம். எவ்வாறாயினும், எங்களின் சுதந்திரப் பயணம் கிட்டத்தட்ட வீணாகி விட்டதை விரைவில் கண்டறிந்தோம். ஒவ்வொரு நாளின் பெரும் பகுதிகளை தொலைத்து விட்டு மீண்டும் எங்கள் வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம். நாங்கள் எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். மேலும் நாமே இடங்களைக் கண்டுபிடிப்பதற்காக இலக்கில்லாமல் அலைவதை விட வழிகாட்டியைப் பின்பற்றுவதே நமது நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வழி என்று இப்போது எங்களுக்குத் தெரியும்.

எங்கள் பயணங்களின் இந்த உதாரணம் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஒப்பீடு செய்கிறது என்று நான் நம்புகிறேன். நம்முடைய சொந்த வழிகளை பின்பற்ற விரும்புகிறோம், நாமே, நமக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். மேலும் நம்முடைய வசதிக்கேற்ப நாம் செய்ய விரும்புவதைச் செய்ய விரும்புகிறோம். ஆனால் நாம் நம் வழியை இழந்து நம் நேரத்தை வீணடிக்கிறோம். இன்றைய வசனத்தில் நம் வாழ்வில், கடவுள் நமக்கு வழிகாட்டுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அவர் பரிசுத்த ஆவியின் மூலம் இதைச் செய்கிறார். நம்மிடம் பேசி, நம்மை வழிநடத்தும்படி அவரிடம் கேட்டால், எங்கு செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும், மரணம் வரை, நீங்கள் எங்கிருந்தாலும், கடவுள் இருக்கிறார்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon