நிறைவேற்றுவதற்கான திறவுகோல்

நிறைவேற்றுவதற்கான திறவுகோல்

சேனைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்து, உங்களுக்கு வந்ததைச் சிந்தித்துப் பாருங்கள். (ஆகாய் 1:5)

கடவுள் உங்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய, அற்புதமான, நிறைவான வாழ்க்கையைத் திட்டமிட்டுள்ளார், ஆனால் நாம் பிடிவாதமாக இருந்தால் (யாத்திராகமம் 33:3 ஐப் பார்க்கவும்) அல்லது கடின இருதயத்துடன் இருந்தால், அவர் நமக்காக வைத்திருப்பதை நாம் இழக்க நேரிடும். பிடிவாதமும், கீழ்ப்படியாமையும் கடவுளின் சத்தத்தைக் கேட்காமல் செய்கிறது. மேலும் நம் வழிகளில் நம்மை முன்னேற விடாமல் செய்கிறது. இந்த நிலையில் நாம் இருப்பதைக் கண்டால், பிரச்சனை என்னவென்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதற்கு தவறிவிடுகிறோம்.

இன்றைய வசனம், தேவனுடைய மக்கள் அதிருப்தியடைந்து பல பிரச்சனைகளை அனுபவித்த காலத்தை விவரிக்கிறது, எனவே கடவுள் அவர்களின் வழிகளைக் கருத்தில் கொள்ளச் சொன்னார். பல சமயங்களில் மனிதர்கள் வாழ்க்கையில் நிறைவடையாத போது, காரணத்தைத் தங்களுக்குள்ளே தேடுவதைத் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தேடுகிறார்கள். உங்கள் வாழ்க்கை நிறைவாய் இருக்கவில்லை என்றால், பழைய ஏற்பாட்டு மக்களிடம் கடவுள் சொன்னது போல் செய்து, “உங்கள் வழிகளைக் கவனியுங்கள்.” “உங்கள் வழிகளைப்” பற்றி உங்களிடம் பேசும்படி கடவுளிடம் கேளுங்கள், மேலும் அவர் சொல்வதைக் கவனியுங்கள். நான் இதை பல முறை செய்ய வேண்டியிருந்தது, அதன் விளைவாக எனது சிந்தனை, எனது நோக்கங்கள் அல்லது எனது நடத்தையில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

காலப்போக்கில் எனது வழிகளை நான் பரிசீலித்தபோது, நான் பிடிவாதமாக, கடினமானவளாக, கருத்துடையவளாக, பெருமையாக இருப்பதைக் கண்டேன், மேலும் பல விஷயங்கள் என்னை முன்னேற விடாமல் தடுத்து விட்டன. ஆனால், கடவுளுக்கு நன்றி, அவர் என்னை மாற்றிவிட்டார்! அவர் என்னை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.

கடவுள் விரும்பும் அனைத்தும் என்னிடம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், வேறு எதுவும் இல்லை. நான் அவருக்கு சொந்தமானவள், நீங்களும் தான். நீங்கள் மகிழ்ச்சியான, ஆசீர்வதிக்கப்பட்ட, அற்புதமான வாழ்க்கை வாழ வேண்டும், திருப்தி மற்றும் நிறைவுடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீங்கள் அந்த வகையான வாழ்க்கையை வாழவில்லை என்றால், உங்கள் வழிகளைக் கருத்தில் கொள்ள நேரம் ஒதுக்குங்கள்; மாற்ற வேண்டியதைக் காட்டும்படி கடவுளிடம் கேளுங்கள், பின்னர் அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்யுங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்களைப் பற்றிய உண்மையை எதிர்கொள்ள பயப்படாதீர்கள், ஏனென்றால் அது உங்களை விடுவிக்கிறது.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon