பரிசுத்த ஆவியின் வல்லமை

பரிசுத்த ஆவியின் வல்லமை

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். (அப்போஸ்தலர் 1:8)

அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருக்குச் சேவை செய்ய விரும்புகிறவர்களுக்கு தேவனுடைய ஆவியானவர் பலத்தைத் தருகிறார். ஒரு நபர் எதையாவது ஒன்றை செய்ய விரும்பலாம். அதைச் செய்ய அவருக்கு சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த சக்தி பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுவதன் மூலம் வர முடியும்.

இயேசு தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம், ஆனால் அவர் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் அதிகாரத்தில் மூழ்கினார், அது அவரது பிதா அவரை அனுப்பிய பணியைச் செய்ய அவருக்கு உதவியது. அப்போஸ்தலர் 10:38 இவ்வாறு கூறுகிறது, “கடவுள், நாசரேத்தை சார்ந்த இயேசுவை பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் செய்தார்.”மேலும் அவர் “நன்மை செய்கிறவராய், பிசாசினால் ஒடுக்கப்பட்ட அனைவரையும் குணப்படுத்தினார். ஏனென்றால் கடவுள் அவருடன் இருந்தார்.”

இயேசு தனது ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன், அவர் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் செய்யப்பட்டார். நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்போது, தேவனுடைய சத்தத்தை இன்னும் தெளிவாகக் கேட்க முடியும். மேலும் நாம் தேவனுடைய ராஜ்யத்தில் சேவை செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் தம்முடைய சாட்சியாய் இருக்க அவர் நம்மீது வந்த போது பரிசுத்த ஆவியின் வல்லமையை (திறன், செயல்திறன் மற்றும் வல்லமை) நாம் பெற்றோம். தேவன் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ அதைச் செய்ய இந்த வல்லமை நமக்கு உதவுகிறது.

பரிசுத்த ஆவியானவரால் அதிகாரம் பெறுவதற்கு முன்பு, இயேசு எந்த அற்புதங்களையும் மற்ற வலிமையான செயல்களையும் செய்யவில்லை என்பதைப் கவனிப்பது முக்கியம். இயேசுவுக்கு ஆவியின் வல்லமை தேவைப்பட்டால், நமக்கும் நிச்சயமாக தேவை. இன்றும் ஒவ்வொரு நாளும், உங்களை அவருடைய ஆவியின் வல்லமையால் நிரப்பும்படி அவரிடம் கேளுங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் வல்லமையை அணுகலாம் – விளக்கை இயக்கவும்!

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon