“இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.” – லூக்கா 17:21
சில நேரங்களில் காரியங்கள் மாற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம், ஆனால் காரியங்கள் மேம்பட எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய மனமில்லாமலிருக்கிறோம்.
என் வாழ்க்கையில், என் சூழ்நிலைகளைப் பற்றி நான் எப்போதும் வருத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. கடவுள் எனக்காக அவற்றை மாற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன். என்னைச் சுற்றியுள்ளவர்களையும் அவர் மாற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் நான் என் வெளிப்பிரகாரமான வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கும் முன், என் உள்பிரகாரமான வாழ்க்கையை மாற்றுவதில் பணியாற்ற வேண்டும் என்று அவர் எனக்குக் காட்டினார்.
மத்தேயு 6:33 கூறுகிறது, எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள், நீதியுடன் வாழுங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? தேவனுடைய ராஜ்யம் நம்மில் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது. நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தால், அவர் உங்களுக்குள் வாசம் செய்கிறார் என்று அர்த்தம் – அவர் ஒரு நல்ல ஆவிக்குறிய வீட்டில் வாழ விரும்புகிறார். அதனால் தான் உங்கள் உள்ளான வாழ்க்கை கடவுளுக்கு மிகவும் முக்கியமானது.
நாம் முதலில் அவருடைய ராஜ்யத்தை தேட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய உள்ளான மனிதனை ஆட்கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர் நம்மில் கிரியை செய்ய அவரை நாம் அனுமதிக்கும்போது, நாளடைவில் நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியாது. அது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றி மாற்றிவிடும்!
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, கவனம் செலுத்தும்படி நீங்கள் என்னிடம் கேட்கும்போது, வெளிப்புற காரியங்களை மாற்ற முயற்சிப்பதில் சிக்கிக் கொள்ளாமல், உம்முடைய ராஜ்யத்தை என் இருதயத்தில் வளர்ப்பதில் எனக்கு உதவும். என் உள்ளான வாழ்க்கையில் கிரியை செய்ய உம்மை அழைக்கிறேன்.