கடவுளின் நீதியுள்ள நண்பர்

கடவுளின் நீதியுள்ள நண்பர்

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரிந்தியர் 5:21)

கடவுளின் நண்பராக இருப்பதை விட அற்புதமான எதையும் என்னால் நினைக்க கூட முடியாது. “ஜாய்ஸ் மேயர் என் நண்பர்” என்று கடவுள் சொல்வதை விட நான் கேட்க விரும்புவது எதுவுமில்லை. அவர், “ஜாய்ஸ் மேயர்—அனைத்து பிரார்த்தனைக் கொள்கைகளையும் அறிந்தவர்; அவர் டஜன் கணக்கான வேத வசனங்களை மேற்கோள் காட்ட முடியும்; அவள் பிரார்த்தனை செய்யும் போது மிக நீண்ட சொற்பொழிவாற்றுவாள்; ஆனால் அவளுக்கு உண்மையில் என்னை தெரியாது, நாங்கள் உண்மையில் நண்பர்கள் இல்லை என்று சொல்வதை நான் விரும்பவில்லை. கடவுள் என்னை அவருடைய நண்பராக நினைக்கிறார் என்பதை நான் அறிய விரும்புகிறேன், மேலும் அவர் உங்களையும் அப்படி நினைக்க வேண்டும் என்று நீங்கள் ஏங்குகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலம், அவருடைய சத்தத்தைக் கேட்கவும், நம் தேவைகளையும், மற்றவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான உதவியைப் பெற தைரியமாக கிருபையின் சிங்காசனத்திற்குச் செல்லவும் நமக்கு உரிமை உண்டு (எபிரேயர் 4:16 ஐப் பார்க்கவும்.).

நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியங்களில் ஒன்று, கடவுளுடன் உங்கள் நட்பை வளர்த்துக்கொள்வதாகும். இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலம் உங்களை நீதிமான்களாக்கினார். எனவே நீங்கள் பூமியில் உங்களின் சிறந்த நண்பரைப் போல தைரியமாகவும், இயற்கையாகவும் கடவுளை அணுக முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. நினைவில் கொள்ளுங்கள், கடவுளுடணான நட்பு வளர்வதற்கு, நேரத்தையும், சக்தியையும் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் உங்கள் நட்பு ஆழமாகும்போது, கடவுளின் சத்தத்தைக் கேட்கும் திறன் அதிகரிக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். கடவுளுடன் வளரும், துடிப்பான, நெருக்கமான நட்பு இயற்கையாகவே அவருடன் அதிக பயனுள்ள தொடர்புக்கு வழிவகுக்கும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று கடவுளுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon