உங்கள் நம்பிக்கை செயல்படுகிறதா?

உங்கள் நம்பிக்கை செயல்படுகிறதா?

கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும். (கலாத்தியர் 5:6)

பலர் நம்பிக்கை என்பது ஆவிக்குறிய முதிர்ச்சியின் முதல் அறிகுறி என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆவிக்குறிய முதிர்ச்சியின் உண்மையான அறிகுறி, அன்பில் நடப்பது என்று நான் நம்புகிறேன். நமது அன்பு நம்பிக்கையை ஊக்குவிக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் நாம் கடவுளுடன் நல்ல உறவை வைத்திருக்க முடியாது. ஆனால் அன்பு நம் நம்பிக்கையை நிரூபிக்கிறது. நம்மை பலப்படுத்துகிறது மற்றும் வெளிப்படுத்துகிறது. நாம் கடவுளை உண்மையாக நேசித்து, அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால், மக்களை நேசிப்போம்.

இன்றைய வசனம், விசுவாசம் அன்பின் மூலம் செயல்படுகிறது என்று நமக்குக் கற்பிக்கிறது, அன்பு என்பது பேச்சு அல்லது கோட்பாடு அல்ல; அது ஒரு நடவடிக்கை. உண்மையில், ஒரு சகோதரன் தேவைப்படுவதைக் கண்டால், அவனுடைய தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையானதைக் கொண்டிருந்தால், அவனுக்கு உதவாமல் இருந்தால் நாம் அன்பில் நடக்க முடியாது என்று வேதம் கூறுகிறது (பார்க்க 1 யோவான் 3:17).

இயேசு மேலும் கூறினார்: “‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.’ இதுவே முதல் மற்றும் பெரிய கட்டளை. மற்றும் இரண்டாவது அது போன்றது: ‘உன் மீது நீ அன்புகூருவது போல் உன் அண்டை வீட்டாரையும் நேசிக்க வேண்டும்.’ இந்த இரண்டு கட்டளைகளிலும் அனைத்து நியாயப்பிரமாணங்களும், தீர்க்கதரிசனங்களும் அடங்கும்” (மத்தேயு 22:37-40). எந்தக் கட்டளை மிகவும் முக்கியமானது என்று கேட்கும் மக்களுக்கு இயேசு இந்த வார்த்தைகளைக் கூறினார். அவர்கள், அவரிடம் இவ்வாறு சொன்னார்கள்: “இயேசுவே எங்களுக்கு சில அடிப்படை கொள்கைகளைக் கொடுங்கள்.” அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்: “சரி. உங்களுக்கு அடிப்படை கொள்கைகள் வேண்டுமா? நீங்கள் அனைத்து சட்டங்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் முழுமையாகக் கீழ்ப்படிய விரும்புகிறீர்களா? அப்படியானால் என்னை நேசியுங்கள், மக்களை நேசியுங்கள்.” இது மிகவும் எளிமையானது. அன்பில் நடப்பதே தனக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல் என்பதை இயேசு மக்களுக்குத் தெரியப்படுத்தினார். அன்பு இல்லாமல் விசுவாசத்தில் நடக்க முயற்சிப்பது பேட்டரி இல்லாத ஒளிரும் விளக்கைப் போன்றது. எப்பொழுதும் நம்முடைய அன்பின் பேட்டரியை சார்ஜ் செய்து வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் நம் நம்பிக்கை பலிக்காது!


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் அன்பாக இருக்கிறார், அவரை நாம் எவ்வளவு அதிகமாக அறிந்து கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்களை நேசிப்போம்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon