பிறருக்கு செய்யுங்கள்

தேவன் நம் வாழ்வில் ஊற்ற பல ஆசீர்வாதங்களைக் வைத்திருக்கிறார். ஆனால் நாம் அறிந்திராத வேறு பல ஆசீர்வாதங்களும் இருக்கிறது. அதைப் பற்றி நாம் அறிந்திருப்பதும் இல்லை. ஏனென்றால் நமக்கு என்ன நடக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ அதை நாம் பிறருக்கு செய்யாமல் இருப்பதாலே தான் நாம் பிறரால் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் நாம் சுயநலமின்றி அவர்களை ஆசீர்வதிக்க முதலில் முயற்சி எடுக்கிறோமா?

உங்கள் திருமணம், குடும்பம் அல்லது நட்பு ஆகியவை நீங்கள் விரும்புவதாக இல்லாவிட்டால், இப்போதே இந்த ஒரு கொள்கையை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் அவர்களை உண்மையில் மாற்றி விடலாம்.

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்காக ஏதாவது செய்யக் காத்திருக்கலாம். அல்லது அவர் முதலில் உங்களுக்கு உதவ வேண்டும் என்று நீங்கள் விரும்புவதால் ஒரு நண்பருக்கு உதவி செய்ய நீங்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டிருக்கலாம். இந்த வழியில் வாழ்வது சுயநலமாக வசதியாக இருக்கும், ஆனால் அவற்றை மாற்ற நீங்கள் முடிவு செய்யும் வரை, காரியங்கள் ஒருபோதும் மாறாது. உங்களை தாழ்த்தி உங்கள் உறவை காப்பாற்ற வேண்டிய நேரம் இது.

உங்கள் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, துடிப்பாக தியாகங்களைச் செய்வதையும், உங்கள் வாழ்க்கையில் கடவுள் வைத்திருக்கும் மக்களுக்கு சேவை செய்வதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு ஊழியராக இருங்கள், மற்றவர்களை ஆசீர்வதிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

நிராகரிக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்டதாக உணருவதற்குப் பதிலாக, நீங்கள் எவ்வாறு நடத்தப்பட விரும்புகிறீர்களோ அதேபோல் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும்போது உங்கள் உறவுகள் மேம்படுவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.


ஜெபம்

தேவனே, சுயநல வாழ்க்கை வாழ்வதன் மூலம் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. மக்கள் எனக்கு நல்லவர்களாக இருப்பார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக, நான் முதலில் அவர்களுக்கு நல்லவனாக இருக்கப் போகிறேன். நான் எப்படி நடத்தப்பட வேண்டுமென்று விரும்புகிறேனோ அப்படியாக அவர்களை நடத்துவேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon