அப்பத்தினால் மாத்திரம் அல்ல

அப்பத்தினால் மாத்திரம் அல்ல

மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். (உபாகமம் 8:3)

நான் விரும்பியபடி என்னுடைய ஊழியம் வளராத வருடங்களில், நான் விரக்தியும், அதிருப்தியும் அடைந்திருந்தேன். நான் உபவாசமிருந்தேன், ஜெபித்தேன், மேலும், எனது மாநாடுகளுக்கு அதிகமான மக்களை வர வைக்க எனக்கு தெரிந்த அனைத்தையும் முயற்சித்தேன்.

நான் விரும்பிய அதிகரிப்பை தேவன் எனக்குக் கொடுக்காத போது, நான் அடிக்கடி புகார் செய்ததையும், வருத்தப்பட்டதையும் நினைவில் கொள்கிறேன். நான் விரும்பியதை விட மக்களின் வருகையும், உற்சாகமும் குறைவாக இருக்க அனுமதிப்பதன் மூலம், தேவன் அடிக்கடி என்னைச் சோதித்தார். அந்தக் கூட்டங்களிலிருந்து நான் வெளியேறிய பின்பு, “தேவனே நான் என்ன தவறு செய்கிறேன்? நீர் ஏன் என்னை ஆசீர்வதிக்கவில்லை? நான் உபவாசமிருக்கிறேன்; நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் கொடுக்கிறேன், நம்புகிறேன், நீர் என் சார்பாக கிரியை செய்யவில்லை! நான் மிகவும் விரக்தியடைந்தேன், நான் வெடித்து விடுவது போல் உணர்ந்தேன். நான் கேட்டேன்,“ ஆண்டவரே, நீர் ஏன் என் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கவில்லை?

அவர் என்னிடம் பேசினார், “ஜாய்ஸ், மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழமாட்டான் என்பதை நான் உனக்குக் கற்பிக்கிறேன்.” இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி பாலைவனத்தின் வழியாகப் பயணித்தபோது அவர் அதே வார்த்தைகளை அவர்களிடமும் பேசினார். இது அவர்கள் தங்களைத் தாழ்த்துவதற்காகவும், தங்களை சோதித்து நிரூபிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டது என்று அவர்களிடம் கூறினார். மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழவில்லை, தேவனுடைய வார்த்தையால் வாழ்கிறான் என்பதை அவர்களுக்குக் கற்பிக்க அப்படி செய்தார்.

நான் என்னைத் தாழ்த்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார், என்னைச் சோதிக்கிறார் என்று நினைக்க எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் “மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழவில்லை” என்று கடவுள் என்னிடம் சொன்னதன் மூலம், என் ஆசைகள் அவருக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன். வேறு எதற்கும் மேலாக. என் ஊழியம் காலப்போக்கில் வளர்ந்தது, ஆனால் அதெல்லாம் கடவுள் என் வாழ்க்கையில் முதன்மையான பிறகுதான். நீங்கள் தேவனால் மட்டுமே திருப்தி அடையும் போது, நீங்கள் விரும்பும் மற்ற காரியங்களை அவர் உங்களுக்கு வழங்க முடியும். அவரே நம் வாழ்வில் நமக்கு உண்மையான அப்பம் மற்றும் நம் ஆத்துமாவின் உண்மையான ஊட்டச்சத்து.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: அப்பத்தினால் மட்டுமே வாழ மறுத்து விடுங்கள்; எல்லாவற்றையும் விட கடவுள் வேண்டும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon