எதிரியை விரக்தியடையச் செய்யுங்கள்

எதிரியை விரக்தியடையச் செய்யுங்கள்

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். (ஜேம்ஸ் 1:2-3)

பல கிறிஸ்தவர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று, சோதனைகள் வரும்போது, தங்கள் கஷ்டங்கள் நிற்கும்படி ஜெபிப்பது. அதற்கு பதிலாக, வலிமை மற்றும் சகிப்புத்தன்மைக்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்; நம்மை உறுதியாக்கும்படி தேவனிடம் கேட்க வேண்டும். எதிரி தனது மிகப் பெரிய துப்பாக்கியை நம்மீது குறிவைத்தால்-நம் வாழ்க்கையை சீர்குலைக்க, நம் வணிகங்களை அழிக்க, நம் குடும்பங்களை கிழிக்க அல்லது நம் சமாதானத்தைத் திருட தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தால்-நாம் உறுதியாகவும், பொறுமையாகவும் இருந்தால், அவன் மிகவும் விரக்தியடைந்து விடுவான், இறுதியில் நாம் அவனுக்கு ஒத்துழைக்காததால் தோற்கடிக்கப்பட்டு விடுவான்.

பிலிப்பியர் 1:28 கூறுகிறது: “நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே “. இந்த வசனம், பிசாசு நமக்கு எதிராக வரும்போது பயப்படவோ, கலங்கவோ வேண்டாம், ஆனால் உறுதியுடன் இருக்குமாறு நம்மை ஊக்குவிக்கிறது. நாம் அப்படி செய்யும் போது, பிசாசு நம்மைக் கையாள முடியாது என்று காட்டுவது மட்டுமல்லாமல், தேவன் மீது நமக்கு நம்பிக்கை இருப்பதையும் நாம் அவருக்குக் காட்டுகிறோம். நம்முடைய செயல்கள், அவர் மீது நமக்குள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்பது மட்டுமல்லாமல் கடவுளுடைய வல்லமையை நம் சூழ்நிலைகளில் புகுத்தி நம்மை விடுவிக்கும் சமிக்ஞையாகும். நீங்கள் உறுதியாக நிற்கவும், பயப்படாமல் இருக்கவும், அவர் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்றும் கடவுள் விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் மீதான உங்கள் நம்பிக்கை மிகவும் உறுதியானதாக இருக்கட்டும், அது எதிரிகளை ஏமாற்றுகிறது.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon