தேவனுக்காகக் காத்திருங்கள்

தேவனுக்காகக் காத்திருங்கள்

கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே. (சங்கீதம் 37:7)

என்னைப் பொருத்த வரை, நான் ஒவ்வொரு நாளும் தேவனிடமிருந்து கேட்க வேண்டும், மேலும் எல்லாவற்றையும் பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன். கடவுளிடமிருந்து கேட்பதற்கு, எல்லாவற்றையும் விட கடவுளுடைய சித்தத்தை தெரிந்து கொள்வதற்கு தேவையான ஞானத்திற்காக காத்திருக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நம்முடைய மாம்ச ஆசைகள் அல்லது உணர்ச்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதில் உறுதியாக இருந்தால், தேவனிடமிருந்து இன்னும் தெளிவாகக் கேட்க முடியும். நாம் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், தேவனிடமிருந்து நமக்கு வழிகாட்டுதல் இருக்கிறது என்ற நம்பிக்கை வரும் வரை காத்திருந்தால், நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். அப்படியானால், நமக்குக் கடினமாக இருந்தாலும், தேவன் நம்மை வழிநடத்துகிறதைச் செய்ய வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பல நல்ல திரைப்படங்களை சேகரிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு ஒழுக்கமான எதுவும் இல்லை. ஒரு நாள், பல நல்ல திரைப்படங்களைப் பட்டியலிடும் ஒரு பத்திரிகை எங்கள் வீட்டிற்கு வந்தது. அதிக திரைப்படங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை தேவன் என் மடியில் இறக்கிவிட்டதாகத் தோன்றியது. நான் உற்சாகமடைந்து சுமார் பதினைந்து திரைப்படங்களை ஆர்டர் செய்ய முடிவு செய்தேன். ஆனால் பிறகு ஆர்டர் படிவத்தை சில நாட்கள் ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் பார்த்தபோது உணர்ச்சிகளும், உற்சாகமும் தணிந்து, இரண்டே இரண்டு படங்களுக்கு ஆர்டர் செய்து முடித்தேன். இது ஒரு எளிய எடுத்துக்காட்டு, ஆனால் இந்த கொள்கை வாழ்க்கையின் பல பகுதிகளுக்குப் பொருந்தும்.

உற்சாகமான உணர்ச்சிகளில் செயல்படும்போது, நாம் அடிக்கடி தவறு செய்கிறோம். நான் சொல்கிறேன், “உணர்ச்சிகள் தணிந்து பிறகு முடிவு செய்யுங்கள்.” ஒரு நல்ல இரவு தூக்கம், காரியங்களைப் பற்றி நாம் உணரும் விதத்தில் எப்படிப்பட்ட வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

காத்திருக்கக் கற்றுக்கொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உணர்ச்சிகள் எழும்பும்; மற்றும் உணர்ச்சியின் ஆற்றல் வந்து போகும், அரிதாகவே, கடவுள் நமக்காக வைத்திருக்கும் இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். நம் உணர்ச்சிகளை விட, அவருடைய வார்த்தையும் அவருடைய ஞானமும் நம்மை வழிநடத்த அனுமதித்தால், எப்போதும் நம்மை ஒரு நல்ல இடத்திற்கு அவர் அழைத்துச் செல்வார்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பிறகு முடிவு செய்யுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon