தேவன் நம்மிடம் தனித்தனியாகப் பேசுகிறார்

தேவன் நம்மிடம் தனித்தனியாகப் பேசுகிறார்

நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். (ஏசாயா 30:21)

தேவன் நம்மிடம் பேசுவதற்கு ஒரு காரணம், சரி மற்றும் தவறுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வதற்காக. அப்பொழுது நாம் நல்ல தேர்வுகளை செய்ய முடியும். சில விஷயங்கள் ஒருவருக்கு தவறாகவும், மற்றொருவருக்கு சரியாகவும் இருக்கலாம் அல்லது நேர்மாறாகவும் இருக்கலாம், எனவே நம் அனைவருக்கும் தேவனிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதல் தேவை. நிச்சயமாக, சரி மற்றும் தவறு பற்றிய சில பொதுவான வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் பொருந்தும்; உதாரணமாக, பொய் சொல்வது, ஏமாற்றுவது, திருடுவது போன்ற பல விஷயங்கள் தவறு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், தனிநபர்களாகிய நமக்குக் குறிப்பிட்ட சில விஷயங்களும் உள்ளன. என் மகன் ஒரு இடத்திற்கு சென்றிருந்தான், அங்கே தங்குவதை ஒரு நாள் நீட்டிக்க திட்டமிட்டிருந்தான், ஆனால் அவன் காலையில் எழுந்த போது, அங்கே தங்கியிருப்பது பற்றி நிம்மதி இல்லாமலிருந்தது. அதனால் அவன் வீடு திரும்பினான். கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மற்றும் தனித்துவமான திட்டங்களை வைத்திருக்கிறார், மேலும் நம்மைப் பற்றி நமக்குத் தெரியாத சில விஷயங்களை அவர் அறிந்திருக்கிறார்.

நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் அதைச் செய்யும்போது நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது என்று நமக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால் நம் இருதயம் மென்மையாக இருந்தால், ஏன் என்று புரியாதபோதும் நாம் அவரை நம்புகிறோம், கீழ்ப்படிகிறோம். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், அவர் நம்மிடம் கேட்கும் அல்லது கேட்கும் அனைத்திற்கும் பின்னால் உள்ள காரணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை – நாம் அவருடைய சத்தத்தைக் கேட்டு, அதற்கு கீழ்ப்படியக் கற்றுக் கொள்ள வேண்டும்.

போருக்கான பயிற்சியில் இருக்கும் வீரர்கள், சில சமயங்களில் அபத்தமான பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும், அது அர்த்தமில்லாத பயிற்சிகள். அவர்கள் அந்த பயிற்சிகளை உடனடியாகச் செய்யக் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் அவர்களுக்குப் புரியாத போதும், விரைவாக, கேள்வியின்றி உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள். அவர்கள் போரின் முன் வரிசையில் இருந்தால், அவர்களின் தலைவர்கள் ஒரு கட்டளையைப் பிறப்பிக்கும் போது, அவர்கள் நிறுத்தி, “ஏன்?” என்று கேட்டால் அவர்கள் கொல்லப்படலாம். அதே போல், நாமும் நம் வாழ்வில் அவருடைய அன்பான வழிகாட்டுதலை நம்பி, தாமதமின்றி, கேள்வியின்றி அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்களுக்குப் புரியாத போதும் கடவுளின் சத்தத்திற்குக் கீழ்ப்படியுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon