“வெறும்” பிரார்த்தனை செய்யாதீர்கள்

“வெறும்” பிரார்த்தனை செய்யாதீர்கள்

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா 3:10)

மக்கள் அடிக்கடி இப்படி ஜெபிப்பதை நான் கேட்கிறேன், நானே பலமுறை அப்படி ஜெபித்திருக்கிறேன், இதை நான் “நியாயமான” ஜெபம் என்று அழைக்கிறேன், அது இதைப் போன்றது: “இப்போது ஆண்டவரே, இந்த உணவுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்,” “கடவுளே, எங்களைக் காக்கும்படி நாங்கள் உம்மிடம் கேட்கிறோம்,” “அப்பா, நாங்கள் இன்றிரவு உம்மிடம் வருகிறோம்…” “கடவுளே, இந்த சூழ்நிலையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்தால் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்…” நான் என்ன சொல்கிறேன் என்று தெரிகிறதா? இது தேவனிடம் அதிகம் கேட்க பயப்படுவதைப் போலிருக்கிறது.

வார்த்தையானது “நீதியானது” அல்லது “நியாயமானது” என்று பொருள்படும், ஆனால் அது “தேவைக்கு மட்டும்” என்றும் பொருள் கொள்ளலாம். நாம் நம்புவதற்கும், கேட்பதற்கும் அல்லது சிந்திக்கத் துணியக் கூடிய அனைத்தையும் விட அதிகமாகவும், மிகுதியாகவும், மேலேயும், அதற்கும் அப்பாலும் கடவுள் நமக்கு கொடுக்க விரும்புகிறார் (எபேசியர் 3:20 ஐப் பார்க்கவும்). அவர் பரலோகத்தின் ஜன்னல்களைத் திறந்து ஆசீர்வாதங்களைப் பொழிய விரும்புகிறார், எனவே நாம் ஏன் தேவைக்கு மட்டும் கேட்பதற்கு அவரை அணுக வேண்டும்? அதிகமாகக் கேட்க பயப்பட்டு பின் ஏன் நாம் கடவுளை அணுக வேண்டும்? நாம் அவரை அப்படி அணுகும்போது, அவர் தாராளமானவர், நல்லவர் என்று நாம் நம்பவில்லையோ என்று தோன்றுகிறது. இன்றைய வசனம் வாக்களிப்பது போல், அவர் “வெறும்” போதிய அளவு கொடுக்கிற கடவுள் அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

பயமுறுத்தும், பாதுகாப்பற்ற “வெறும்” பிரார்த்தனைகளைக் கேட்க கடவுள் விரும்பவில்லை. தன்னுடன் நட்பில் பாதுகாப்பாக இருக்கும் மக்கள் ஜெபிக்கும் தைரியமான, நம்பிக்கையான, விசுவாசம் நிறைந்த ஜெபங்களைக் கேட்க விரும்புகிறார்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: ஜெபம் என்று வரும் போது, “வெறும்” மட்டும் போதாது.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon